2
ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருந்தான். மணி ஏழு ஆகிவிட்டதால் பஸ் ஸ்டாண்டுக்கு வருகிற கூட்டம் அதிகரித்து, வியாபாரம் சூடு பிடித்திருந்தது.
“என்ன டோனி கர்டிஸ்... காலையிலே கிரவுண்டுக்குப் போகலியா?” என்று பாட்மிண்டன் மட்டையை அநாயாசமாகச் சுழற்றியவாறு இளைஞன் போல் தாவிக் குதித்துப் படியேறினார். கெமிஸ்ட்ரி லெக்சரர் ராமபத்ரன். தலைநகரைதான் வயது நாற்பதைத் தாண்டி விட்டது என்று காட்டிக் கொடுத்தது. உடம்பிலும் கண்களிலும் ஜீவசக்தி துள்ளியது.
ராஜாமணி எழுந்து நின்றான்.
“இல்லே சார்... ‘பார்ட்னர்ஸ்’ கெடைக்கலே.”
“ஸிட் டவுன்” “ஸிட் டவுன்” அநாயாசமாகக் கையசைத்தார்.
“நேத்து கிரவுண்ட்லே உன் ‘பிளே’வைக் கவனிச்சேன். நாட்பேட். ஆனா இன்னும் அலெர்ட்னஸ் வேணும், பேட்டிங்கில் ஷோ முக்கியமில்ல. உன் ப்ளேயிலே டிஸ்பிளே இருக்கு. ஆனா ஸ்விங் வேணும். பேட்டிங்குக்கு எனர்ஜியும் அக்யூரஸியும் முக்கியம். சும்மா சும்மா ஆனந்த பவன் மசால் தோசைகளையும், ஆமவடைகளையும் ஒரு கை பார்த்துண்டிருந்தா போதாது. யு ஷûட் லிஸன் ப்ளேயர்ஸ்... மெட்ராஸிலே டெஸ்ட் மாட்ச்சு இருக்கு பாக்கப் போறியா...?”
ராமபத்ரன் ஆல் ரவுண்டர். கிரிக்கெட், செஸ், கர்நாடக சங்கீதம், வேத அத்யயனம், கம்யூனிஸம், ஜாகரபீ, நவீன இலக்கியம், சினிமா எதற்கும் அவர் ஈடுகொடுப்பார். ‘அப்டுடேட்’டாக இருப்பார். ராஜாமணியின் கிரிக்கெட் ஈடுபாட்டிற்கு, அவர் தான் பிள்ளையார் சுழி போட்டவர்.
tய“இல்லீங்க சார்... ஸீஸன் டிக்கெட் கெடைக்கலே...”
“கெடைக்கலேன்னு முக்கரணம் சொல்லலாமா, கிரிக்கெட், ப்ளேயரா இருந்துண்டு? முண்டியடிச்சு போட்டு ஊரெல்லாம் அரிச்சாவது, ஒரு டிக்கெட்
வாங்கணுமோல்லியோ?
பில்லை வாங்கிப் போட்டவாறே ராஜாமணி பதிலளித்தான்.
“ஐ ட்ரைட் மை பெஸ்ட்.” - அவன் குரலில் உண்மையாகவே ஏக்கம் தொனித்தது.
“எங்கிட்டே ஒரு டிக்கெட் இருக்கு.”
“சார்... சார்...” - சட்டென்று ராஜாமணி கல்லாவை விட்டே எழுந்து விட்டான்.
“ஸிட் டவுட்... ஸிட் டவுன்... மை பாய், எவ்வளவு ரூபா கொடுப்பே?” என்று கண்களைச் சிமிட்டினார் ராமத்ரன்.
“கேக்கற ரூபாயைக் கொடுத்துடறேன் சார்.”
“ஈஸிட்...” என்று கேட்டுவிட்டு அவனைக் குறுகுறுவென்று பார்த்து, மெல்ல விசிலடித்தார் ராமபத்ரன்.
“என்ன சார்?” என்று நம்பிக்கையும் சந்கேமும் ஊசலாட, அவரைப் பார்த்து ராஜாமணியின் கண்கள் கெஞ்சின.
“தௌஸண்ட் ருபீஸ்...”
“மை காட்” என்று நாற்காலியில் உட்கார்ந்து விட்டான்.
“ஈஸி மை பாய், இவ்வளவுதானா உன் இன்ட்ரஸ்ட்?
“என் இன்ட்ரஸ்டுக்கு எல்லை இல்லை சார்... கபாஸிட்டிக்குத்தான்...”
“இட்ஸ் ஆல் ரைட்... எனக்காக என்னுடைய அத்திம்பேர் பிள்ளை வாங்கி அனுப்பிச்சிருந்தான், நான் போய்ப் பார்க்கிறதை விட, நீ போய்ப் பார்க்கறது யூஸ்ஃபுல்லா இருக்கும். சாயந்திரமா வீட்டுக்கு வா.
“பணம் சார்...?” என்ற இழுத்தான் ராஜாம்.
“என்கிட்டே அத்திம்பேர் பிள்ளை பணம் வாங்க மாட்டேன்னுட்டான். நான் எப்படி உங்கிட்டே வாங்கறது?” அவர் விடுவிடுவென்று உள்ளே நுழைந்தார்.
“சார்... சார்” என்று ராஜாமணி கூப்பிட்டான்.
அவன் குரலைப் புறக்கணித்து விட்டு உள்ளே யாரோடோ ராமபத்ரன் பேசத் தொடங்கிவிட்டார்.
“ஹலோ பத்மநாபன்... நேத்து ரேடியோவிலே படேகுலாம் பாட்ட வச்சானே, கேட்டீரா ஐயா... மைகாட்... அது என்னப் பாதுகுரலா... ஆத்மாவே குமுர்றாப்போல இருக்கு. சஞ்சாரங்கள்ளே என்ன டெப்த்... திரில்... திரில்... கிரேட் த்ரில்.”
ராஜாமணி வாயடைத்து விட்டான். இதுதான் ராமபத்ரன். நல்லதையும் கெட்டதையும் சட்டையில் ஒட்டிய தூசு மாதிரி உதறிவிடுவார்.
“எல்லாவற்றையும் எல்லாரையும் முன்னேற்றத்தை நோக்கி உதைத்துத் தள்ளு. அப்புறம் வாயை மூடிக்கொள். இதை நான் சொல்லலே. அப்பா, விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்...” என்பார்.
நிறையப் பேர் சொல்வார்கள். மேற்கோள்களை இரண்டு ஜேபிகளிலிருந்தும் எடுத்து அள்ளி வீசுவார்கள். விவகாரம் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். ராமபத்ரன் முரண்பாடு இல்லாதவர். பல இளைஞர்களின் உள்ளத்தில் அவர் வாக்கு ஒரு விளக்காகி இருக்கிறது.அது தான் கேஷ் டேபிளில் உட்கார்ந்திருந்த அவனை எழுந்திருக்க வைத்தது
ராஜாமணியின் உருவாக்கத்தில் அவர் பங்கு முக்கியம்.
வெளியே நிற்கும் சைக்கிளை எடுக்கச் செல்வதற்காக ஜீப் ஒன்று மெயின் ரோடில் விட்டு விட்டு ஹார்ன் செய்தது. டி.எஃப்.ஓ.ப் டிரைவர் ஜீப்பிலிருந்தவாறே ராஜாமணியைப் பார்த்துக் கையை அசைத்தான்.
“உமாசங்கர்... வெளியே ஜீப் நிற்க வழியில்லாமே சைக்கிளை விட்டிருக்காங்க பாரு” என்று உரக்கச் சொன்னவாறு மேஜை மேலிருந்த ‘காலிங் பெல்’லை அடித்தான்.
உமாசங்கர் போய்ச் சைக்கிளை எடுத்து ஒதுக்கிவிட்டு ஜீப்புக்கு வழி செய்தான்.
டிரைவர் வந்து கல்லாவுக்கு எதிரில் ஐஸ் ப்ளாண்டிற்குப் பக்கத்தில் போட்டிருந்த மேஜையருகில் உட்கார்ந்தான்.
“என்ன டிரைவர்?”
“ரிலீவர் வந்துட்டாரு... ஐயா நாளைக்குச் சார்ஜ் கொடுத்துடுவாரு...”
“அப்படியா...?”
ராஜாமணிக்கு முகம் வாடிவிட்டது. ஒரு காலை நேரத்தில் இனிப்பும் கசப்பும் எப்படி அடுத்தடுத்து வருகின்றன. டெஸ்ட் மாட்சுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது. டி.எஃப்.ஓ. பங்களா இனி அந்நியமாகிவிடும் சார்ஜ் கொடுத்துவிட்டு டி.எஃப்.ஓ. நாளை கிளம்பப் போகிறார்.
சேக்ரட் ஹார்ட் கல்லூரிக்கு அருகில் மாதிரிக் காடு போல் உயர்ந்த மரங்களும், அடர்ந்த நிழலும் கவிந்த டி.எஃப்.ஓ. சார்ஜ் கொடுத்துவிட்டு நாளை கிளம்பப் போகிறார்.
டி.எஃப்.ஓ. சோமையா குடகு நாட்டைச் சேர்ந்தவர் குடகு 0ராஜாமணி.
மலிவான வாயில் சேலை, கறுப்பு வாயில் ரவிக்கை கழுத்தில் ஒரு கறுப்பு மணி. கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள்.
ராஜாமணிக்கு காலையில் நஷ்டமும் லாபமுமாகக் கிடைத்த இரண்டு உணர்வுகளும் சட்டென்று மறந்து விட்டன. ஓட்டலும், அவன் கல்லாவில் உட்கார்ந்திருப்பதும் ஒரு கணம் மறந்து விட்டது.
மை தீட்டிய கரிய இமைகள், இளஞ்சிவப்பு நிறமான உதடுகள், எலுமிச்சை நிறத்தில் கன்னங்கள் மட்டும் மஞ்சள் பூச்சையும் மீறிச் சிவந்திருப்பதும் உடல் வாகில் மிதமான சதை பிடித்திருப்பதும் எல்லாமே ஓர் அதிசயம்போல் தென்பட்டன.
ஜமுனா அவனைப் பார்த்து இனிமையாகச் சிரித்தாள். அவளது குளிர்ந்த கண்கள் உருண்டபோது, ஒரு காந்தப் பகுதி நோக்கி தன் வலிமையை எல்லாம் இழந்து தான் ஓடுவது போல் உணர்ந்தான்.
“ராஜு... அப்பாவைப் பார்க்கணும்” என்று சொன்னாள்.
அந்தக் குரல் ஐந்து வருஷத்துக்கு முன்கேட்ட ஜமுனாவின் குரல் போலவே இல்லை. இந்த நெகிழ்வும் ஒரு சங்கீதச் சாயலும் இவள் குரலுக்கு எப்போது வந்தன? பழைய ஜமுனாவா இவள்? பாவாடையில் மூக்கைத் துடைத்துக் கொண்டு கையிலும் காலிலும் தெருப்புழுதியில் அளைந்து மண்ணைப் பூசிக் கொண்டு வந்த அந்த ஜமுனாவா...?
ராஜாமணி, ரங்கையர் வீட்டுக்குப் போய் ஐந்து வருஷமாகிறது. இந்த இடைவெளியில் காலம் அவளை எப்படியெல்லாம் அலங்கரித்து விட்டிருக்கிறது. அவன் அவள் கேட்டதைக் கூட மறந்து அவனது யௌவனத்தின் காந்தச் சுழல்களில் தடுமாறிக் கொண்டிருந்தான்.
ஜமுனாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
களுக்கென்று வாய் விட்டுச் சிரித்து விட்டாள். சட்டென்று சிரிப்பை வாய் மேல் கையை மூடி மறைத்துக் கொண்டாள்.
“ஆ...ஆம்... என்ன கேட்டே?”
புன்முறுவல் மாறாமல், அவனை ஒரு பழைய சிநேகிதனைப் பார்ப்பது போன்ற கனிவுடன் பார்த்தவாறே “என்ன அப்படிப் பார்க்கிறே... நான் யாரு தெரியுதா... ஜம்னா...” என்றாள்.
“ஜம்னா...ஓ...தெரியுமே... என்னமா வளர்ந்துட்டிருக்கே! என்ன கேட்டே...?”
“அப்பாவைப் பார்க்கணும்னேன்.”
“உட்காரேன்...” கணகணவென்று மேஜை மேலிருந்த மணியை அடித்தான் ராஜாமணி.
ரங்கையரே வந்துவிட்டார்.
“என்னம்மா...?” என்று திடுக்கிட்டவாறே அவர் ஜமுனாவைப் பார்த்தார்.
“யாரோ ஒருத்தி வீட்டுக்கு வந்திருக்காப்பா... பேரு ஆனந்த லட்சுமியாம். சேப்பா ஒல்லியா இருக்கா. கேதார் நாத்துக்குப் போறாளாம். வர்ற வழியிலே ஒங்களைப் பார்க்கணும்னு தோணித்தாம்.”
ஆனந்தலட்சுமி என்ற பெயரைக் கேட்டதும் ரங்கையர் முகம் மாறி விட்டது.
“சரி...சரி... அதுக்கு நீயே வரணுமா? வேற யாரையாவது அனுப்பிச்சிருக்கப்படாதா...?” என்று இதமாகக் கடிந்து கொண்டார்.
“இல்லப்பா... அவ பத்து மணி வண்டியிலே பொறப்படணும்னு அவசரப்பட்டா. வீதியிலே பையன்கள் யாரும் கெடைக்கலே...” என்று தன்ங தவற்றை உணர்ந்தது போல் கீழுதட்டை லேசாகக் கடித்துக் கொண்டாள் ஜமுனா.
அந்தக் கடிபட்ட கீழுதடு ராஜாமணியின் மனசில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்திற்று.
“ராஜா... நான் வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன். அண்ணா வந்தார்னா சொல்லிடு” என்று உடனே கிளம்பினார் அவர்.
ரங்கையர் படியிறங்கும்போது ஜமுனா அவளும் ராஜாமணியும் சேர்ந்து விளையாடிய காலங்களை நினைத்து மெதுவாகப் புன்னகை செய்தாள். அன்று கல்லாவில் உட்கார்ந்ததற்கு அற்புதமான பரிசு கிடைத்த மாதிரி ராஜாமணிக்குச் சிலிர்த்தது.
ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருந்தான். மணி ஏழு ஆகிவிட்டதால் பஸ் ஸ்டாண்டுக்கு வருகிற கூட்டம் அதிகரித்து, வியாபாரம் சூடு பிடித்திருந்தது.
“என்ன டோனி கர்டிஸ்... காலையிலே கிரவுண்டுக்குப் போகலியா?” என்று பாட்மிண்டன் மட்டையை அநாயாசமாகச் சுழற்றியவாறு இளைஞன் போல் தாவிக் குதித்துப் படியேறினார். கெமிஸ்ட்ரி லெக்சரர் ராமபத்ரன். தலைநகரைதான் வயது நாற்பதைத் தாண்டி விட்டது என்று காட்டிக் கொடுத்தது. உடம்பிலும் கண்களிலும் ஜீவசக்தி துள்ளியது.
ராஜாமணி எழுந்து நின்றான்.
“இல்லே சார்... ‘பார்ட்னர்ஸ்’ கெடைக்கலே.”
“ஸிட் டவுன்” “ஸிட் டவுன்” அநாயாசமாகக் கையசைத்தார்.
“நேத்து கிரவுண்ட்லே உன் ‘பிளே’வைக் கவனிச்சேன். நாட்பேட். ஆனா இன்னும் அலெர்ட்னஸ் வேணும், பேட்டிங்கில் ஷோ முக்கியமில்ல. உன் ப்ளேயிலே டிஸ்பிளே இருக்கு. ஆனா ஸ்விங் வேணும். பேட்டிங்குக்கு எனர்ஜியும் அக்யூரஸியும் முக்கியம். சும்மா சும்மா ஆனந்த பவன் மசால் தோசைகளையும், ஆமவடைகளையும் ஒரு கை பார்த்துண்டிருந்தா போதாது. யு ஷûட் லிஸன் ப்ளேயர்ஸ்... மெட்ராஸிலே டெஸ்ட் மாட்ச்சு இருக்கு பாக்கப் போறியா...?”
ராமபத்ரன் ஆல் ரவுண்டர். கிரிக்கெட், செஸ், கர்நாடக சங்கீதம், வேத அத்யயனம், கம்யூனிஸம், ஜாகரபீ, நவீன இலக்கியம், சினிமா எதற்கும் அவர் ஈடுகொடுப்பார். ‘அப்டுடேட்’டாக இருப்பார். ராஜாமணியின் கிரிக்கெட் ஈடுபாட்டிற்கு, அவர் தான் பிள்ளையார் சுழி போட்டவர்.
tய“இல்லீங்க சார்... ஸீஸன் டிக்கெட் கெடைக்கலே...”
“கெடைக்கலேன்னு முக்கரணம் சொல்லலாமா, கிரிக்கெட், ப்ளேயரா இருந்துண்டு? முண்டியடிச்சு போட்டு ஊரெல்லாம் அரிச்சாவது, ஒரு டிக்கெட்
வாங்கணுமோல்லியோ?
பில்லை வாங்கிப் போட்டவாறே ராஜாமணி பதிலளித்தான்.
“ஐ ட்ரைட் மை பெஸ்ட்.” - அவன் குரலில் உண்மையாகவே ஏக்கம் தொனித்தது.
“எங்கிட்டே ஒரு டிக்கெட் இருக்கு.”
“சார்... சார்...” - சட்டென்று ராஜாமணி கல்லாவை விட்டே எழுந்து விட்டான்.
“ஸிட் டவுட்... ஸிட் டவுன்... மை பாய், எவ்வளவு ரூபா கொடுப்பே?” என்று கண்களைச் சிமிட்டினார் ராமத்ரன்.
“கேக்கற ரூபாயைக் கொடுத்துடறேன் சார்.”
“ஈஸிட்...” என்று கேட்டுவிட்டு அவனைக் குறுகுறுவென்று பார்த்து, மெல்ல விசிலடித்தார் ராமபத்ரன்.
“என்ன சார்?” என்று நம்பிக்கையும் சந்கேமும் ஊசலாட, அவரைப் பார்த்து ராஜாமணியின் கண்கள் கெஞ்சின.
“தௌஸண்ட் ருபீஸ்...”
“மை காட்” என்று நாற்காலியில் உட்கார்ந்து விட்டான்.
“ஈஸி மை பாய், இவ்வளவுதானா உன் இன்ட்ரஸ்ட்?
“என் இன்ட்ரஸ்டுக்கு எல்லை இல்லை சார்... கபாஸிட்டிக்குத்தான்...”
“இட்ஸ் ஆல் ரைட்... எனக்காக என்னுடைய அத்திம்பேர் பிள்ளை வாங்கி அனுப்பிச்சிருந்தான், நான் போய்ப் பார்க்கிறதை விட, நீ போய்ப் பார்க்கறது யூஸ்ஃபுல்லா இருக்கும். சாயந்திரமா வீட்டுக்கு வா.
“பணம் சார்...?” என்ற இழுத்தான் ராஜாம்.
“என்கிட்டே அத்திம்பேர் பிள்ளை பணம் வாங்க மாட்டேன்னுட்டான். நான் எப்படி உங்கிட்டே வாங்கறது?” அவர் விடுவிடுவென்று உள்ளே நுழைந்தார்.
“சார்... சார்” என்று ராஜாமணி கூப்பிட்டான்.
அவன் குரலைப் புறக்கணித்து விட்டு உள்ளே யாரோடோ ராமபத்ரன் பேசத் தொடங்கிவிட்டார்.
“ஹலோ பத்மநாபன்... நேத்து ரேடியோவிலே படேகுலாம் பாட்ட வச்சானே, கேட்டீரா ஐயா... மைகாட்... அது என்னப் பாதுகுரலா... ஆத்மாவே குமுர்றாப்போல இருக்கு. சஞ்சாரங்கள்ளே என்ன டெப்த்... திரில்... திரில்... கிரேட் த்ரில்.”
ராஜாமணி வாயடைத்து விட்டான். இதுதான் ராமபத்ரன். நல்லதையும் கெட்டதையும் சட்டையில் ஒட்டிய தூசு மாதிரி உதறிவிடுவார்.
“எல்லாவற்றையும் எல்லாரையும் முன்னேற்றத்தை நோக்கி உதைத்துத் தள்ளு. அப்புறம் வாயை மூடிக்கொள். இதை நான் சொல்லலே. அப்பா, விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்...” என்பார்.
நிறையப் பேர் சொல்வார்கள். மேற்கோள்களை இரண்டு ஜேபிகளிலிருந்தும் எடுத்து அள்ளி வீசுவார்கள். விவகாரம் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். ராமபத்ரன் முரண்பாடு இல்லாதவர். பல இளைஞர்களின் உள்ளத்தில் அவர் வாக்கு ஒரு விளக்காகி இருக்கிறது.அது தான் கேஷ் டேபிளில் உட்கார்ந்திருந்த அவனை எழுந்திருக்க வைத்தது
ராஜாமணியின் உருவாக்கத்தில் அவர் பங்கு முக்கியம்.
வெளியே நிற்கும் சைக்கிளை எடுக்கச் செல்வதற்காக ஜீப் ஒன்று மெயின் ரோடில் விட்டு விட்டு ஹார்ன் செய்தது. டி.எஃப்.ஓ.ப் டிரைவர் ஜீப்பிலிருந்தவாறே ராஜாமணியைப் பார்த்துக் கையை அசைத்தான்.
“உமாசங்கர்... வெளியே ஜீப் நிற்க வழியில்லாமே சைக்கிளை விட்டிருக்காங்க பாரு” என்று உரக்கச் சொன்னவாறு மேஜை மேலிருந்த ‘காலிங் பெல்’லை அடித்தான்.
உமாசங்கர் போய்ச் சைக்கிளை எடுத்து ஒதுக்கிவிட்டு ஜீப்புக்கு வழி செய்தான்.
டிரைவர் வந்து கல்லாவுக்கு எதிரில் ஐஸ் ப்ளாண்டிற்குப் பக்கத்தில் போட்டிருந்த மேஜையருகில் உட்கார்ந்தான்.
“என்ன டிரைவர்?”
“ரிலீவர் வந்துட்டாரு... ஐயா நாளைக்குச் சார்ஜ் கொடுத்துடுவாரு...”
“அப்படியா...?”
ராஜாமணிக்கு முகம் வாடிவிட்டது. ஒரு காலை நேரத்தில் இனிப்பும் கசப்பும் எப்படி அடுத்தடுத்து வருகின்றன. டெஸ்ட் மாட்சுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது. டி.எஃப்.ஓ. பங்களா இனி அந்நியமாகிவிடும் சார்ஜ் கொடுத்துவிட்டு டி.எஃப்.ஓ. நாளை கிளம்பப் போகிறார்.
சேக்ரட் ஹார்ட் கல்லூரிக்கு அருகில் மாதிரிக் காடு போல் உயர்ந்த மரங்களும், அடர்ந்த நிழலும் கவிந்த டி.எஃப்.ஓ. சார்ஜ் கொடுத்துவிட்டு நாளை கிளம்பப் போகிறார்.
டி.எஃப்.ஓ. சோமையா குடகு நாட்டைச் சேர்ந்தவர் குடகு 0ராஜாமணி.
மலிவான வாயில் சேலை, கறுப்பு வாயில் ரவிக்கை கழுத்தில் ஒரு கறுப்பு மணி. கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள்.
ராஜாமணிக்கு காலையில் நஷ்டமும் லாபமுமாகக் கிடைத்த இரண்டு உணர்வுகளும் சட்டென்று மறந்து விட்டன. ஓட்டலும், அவன் கல்லாவில் உட்கார்ந்திருப்பதும் ஒரு கணம் மறந்து விட்டது.
மை தீட்டிய கரிய இமைகள், இளஞ்சிவப்பு நிறமான உதடுகள், எலுமிச்சை நிறத்தில் கன்னங்கள் மட்டும் மஞ்சள் பூச்சையும் மீறிச் சிவந்திருப்பதும் உடல் வாகில் மிதமான சதை பிடித்திருப்பதும் எல்லாமே ஓர் அதிசயம்போல் தென்பட்டன.
ஜமுனா அவனைப் பார்த்து இனிமையாகச் சிரித்தாள். அவளது குளிர்ந்த கண்கள் உருண்டபோது, ஒரு காந்தப் பகுதி நோக்கி தன் வலிமையை எல்லாம் இழந்து தான் ஓடுவது போல் உணர்ந்தான்.
“ராஜு... அப்பாவைப் பார்க்கணும்” என்று சொன்னாள்.
அந்தக் குரல் ஐந்து வருஷத்துக்கு முன்கேட்ட ஜமுனாவின் குரல் போலவே இல்லை. இந்த நெகிழ்வும் ஒரு சங்கீதச் சாயலும் இவள் குரலுக்கு எப்போது வந்தன? பழைய ஜமுனாவா இவள்? பாவாடையில் மூக்கைத் துடைத்துக் கொண்டு கையிலும் காலிலும் தெருப்புழுதியில் அளைந்து மண்ணைப் பூசிக் கொண்டு வந்த அந்த ஜமுனாவா...?
ராஜாமணி, ரங்கையர் வீட்டுக்குப் போய் ஐந்து வருஷமாகிறது. இந்த இடைவெளியில் காலம் அவளை எப்படியெல்லாம் அலங்கரித்து விட்டிருக்கிறது. அவன் அவள் கேட்டதைக் கூட மறந்து அவனது யௌவனத்தின் காந்தச் சுழல்களில் தடுமாறிக் கொண்டிருந்தான்.
ஜமுனாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
களுக்கென்று வாய் விட்டுச் சிரித்து விட்டாள். சட்டென்று சிரிப்பை வாய் மேல் கையை மூடி மறைத்துக் கொண்டாள்.
“ஆ...ஆம்... என்ன கேட்டே?”
புன்முறுவல் மாறாமல், அவனை ஒரு பழைய சிநேகிதனைப் பார்ப்பது போன்ற கனிவுடன் பார்த்தவாறே “என்ன அப்படிப் பார்க்கிறே... நான் யாரு தெரியுதா... ஜம்னா...” என்றாள்.
“ஜம்னா...ஓ...தெரியுமே... என்னமா வளர்ந்துட்டிருக்கே! என்ன கேட்டே...?”
“அப்பாவைப் பார்க்கணும்னேன்.”
“உட்காரேன்...” கணகணவென்று மேஜை மேலிருந்த மணியை அடித்தான் ராஜாமணி.
ரங்கையரே வந்துவிட்டார்.
“என்னம்மா...?” என்று திடுக்கிட்டவாறே அவர் ஜமுனாவைப் பார்த்தார்.
“யாரோ ஒருத்தி வீட்டுக்கு வந்திருக்காப்பா... பேரு ஆனந்த லட்சுமியாம். சேப்பா ஒல்லியா இருக்கா. கேதார் நாத்துக்குப் போறாளாம். வர்ற வழியிலே ஒங்களைப் பார்க்கணும்னு தோணித்தாம்.”
ஆனந்தலட்சுமி என்ற பெயரைக் கேட்டதும் ரங்கையர் முகம் மாறி விட்டது.
“சரி...சரி... அதுக்கு நீயே வரணுமா? வேற யாரையாவது அனுப்பிச்சிருக்கப்படாதா...?” என்று இதமாகக் கடிந்து கொண்டார்.
“இல்லப்பா... அவ பத்து மணி வண்டியிலே பொறப்படணும்னு அவசரப்பட்டா. வீதியிலே பையன்கள் யாரும் கெடைக்கலே...” என்று தன்ங தவற்றை உணர்ந்தது போல் கீழுதட்டை லேசாகக் கடித்துக் கொண்டாள் ஜமுனா.
அந்தக் கடிபட்ட கீழுதடு ராஜாமணியின் மனசில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்திற்று.
“ராஜா... நான் வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன். அண்ணா வந்தார்னா சொல்லிடு” என்று உடனே கிளம்பினார் அவர்.
ரங்கையர் படியிறங்கும்போது ஜமுனா அவளும் ராஜாமணியும் சேர்ந்து விளையாடிய காலங்களை நினைத்து மெதுவாகப் புன்னகை செய்தாள். அன்று கல்லாவில் உட்கார்ந்ததற்கு அற்புதமான பரிசு கிடைத்த மாதிரி ராஜாமணிக்குச் சிலிர்த்தது.
No comments:
Post a Comment