6
வாழையிலைக் கட்டுக்குப் போட்டிருந்த நார்க்கட்டை பேனாக் கத்தியால் அறுத்தார் ரங்கையர். மூன்று கட்டுகள். கட்டு அறுந்தும் சிறைவாசம் நீங்கிய ஆசுவாசத்தோடு வாழையிலைகள் விரிந்து கொடுத்தன. நல்ல கிளிப் பச்சை நிறத்தில், தொட்டுப் பார்ப்பதிலேயே ஒரு சுகமும் ஆசையும் தூண்டும் மிருது. ஆனந்தபவனில் மட்டும்தான் அந்த இலையில் சாப்பிடும் இதம் கிடைக்கும்.
காலையில் ஒடுகத்தூரிலிருந்து வரும் முதல் சிங்கிளில் எஸ்.கே.பி.எம் டிரைவர் கோவிந்தன் கொண்டு வந்து இறக்கி விடுவான். வருஷக் கணக்கு ரங்கையருக்கு ஞாபகமில்லை. ரொம்ப நாளாக நடக்கும் மாமூல் அது, ஸ்டாண்டில் பஸ்ஸை நிறுத்தி விட்டு, கோவிந்து பல்துலக்க ஆனந்தபவனுக்கு வருவான்.
ஸ்டாலுக்கு எதிர் டேபிளில் தான் உட்காருவான். அந்த டேபிளுக்கு யார் சர்வராக இருந்தாலும் ரங்கையர்தான் கோவிந்துவைக் கவனிப்பார். அவர் கையில் பலகாரம் சாப்பிடாமல் போய்விட்டால் ஏதாவது ஒரு ஆக்ஸிடென்ட்டோ, தகராறோ நடக்கப் போகிறது என்று கோவிந்து கண்டுபிடித்து வைத்திருந்தான்.
ஒடுகத்தூர் வாழைத் தோட்டங்களில் ஆனந்தபவனுக்கேற்ற வாழை மரங்களை பஸ்ஸில் போகும் போதும் வரும்போதும் கவனித்துக் கொண்டு போவான். டிரைவர் வேலையிலிருந்து கொண்டே பையனைப் படிக்க வைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக்கிவிட்டான். கந்திலியில்தான் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனுக்கு வேலையாகி இருந்தது.
கிருஷ்ணனும் ஹாஸ்டலில் இடம் கிடைக்காமல் ஆனந்தபவன் சாப்பாட்டில்தான் காலேஜ் முடித்தவன். எனவே இன்றைக்கும் அவனுக்கு ஒரு காரியரில் நாள்தோறும் இரண்டு வேளை. வண்டியில் சாப்பாடு போகிறது.
காலையில் டிபன் சாப்பிடும் போது பெரிய பெண் பிரசவத்திற்கு வீடு வந்திருப்பதையும், கிருஷ்ணனுக்கு நிச்சயதார்த்தம் செய்ய யோசிப்பதையும் ரங்கையரிடம் சொல்லியிருந்தான் கோவிந்து.
வழக்கமாக வாழையிலைக் கட்டை அறுக்கும் போதெல்லாம் ரங்கையருக்கு கோவிந்துவின் குடும்ப ஞாபகம் வரும், ஆனந்தபவனின் தொழில் சக்கரம் இயங்க, இப்படிப் பல சின்னஞ்சிறு பல்சக்கரங்கள். ஒன்றை ஒன்று தள்ள, ஆனந்தபவனின் இயக்கத்தில் அந்தரங்க சுத்தியான பிரீதியோடு உருளுகின்ற பல்சக்கரங்கள்.
சாயந்திர டிபனுக்காகக் கொஞ்ச இலைகளை ஒதுக்கிவிட்டு மீதியை ராத்திரி சாப்பாட்டிற்காக ஒதுக்கினார். நீளவாக்கில் இருந்த இலைகளை மும்மூன்றாக வகிர்ந்து கொண்டே சமையல் கட்டைச் சுற்றி நோட்டம் விட்டார் ரங்கையர். வைத்தா காப்பி அடுப்பின் முன்னே ஸ்டூலில் உட்கார்ந்தவாறு சினிமாப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான். டபரா செட்டுகள் காப்டனுக்கு முன்னே நிற்கும் பட்டாள அணிவகுப்பு மாதிரி வரிசை வரிசையாக நின்றன.
அடுப்பில் பால் காய்ந்தது. சந்தை நாள் என்று அரிசி மூன்றுபடி அதிகமாக வேக வைத்து விட்டார்கள் சாப்பாட்டு ரேட் ஏறிவிட்டதால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் பல பேர் சாப்பிட வரவில்லை. சாதமும் சாம்பாரும் மீந்துவிட்டன. சர்வர் மணி வாழை இலை வைத்து, சட்னி வழித்துக் கொண்டிருந்தான். அவனைத் தவிர வேறு சர்வர் யாரையும் காணோம்.
டிபன் அடுப்பில் வெந்நீர் காய்ந்து கொண்டிருந்தது. ஊமை நெருப்பில் குருவி இறகு போல் சாம்பல் மூடிக் கிடந்தது.
க்ளீனர் பாபா அராபிய அடிமை மாதிரி மார்பின் மேல் கையைக் கட்டிக் கொண்டு, பில் எழுதும் டெஸ்கிற்கு மேல் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தான். ஏழிலிருந்து பத்து மணிவரை ஏதோ அடிதடி நடக்கிற மாதிரி இயங்கிய சமையல்கட்டு விச்ராந்தியாக ஓய்வெடுத்தது.
மத்தியானம் இரண்டரை மணியானால் ஆனந்த பவனில் இப்படி ஒரு மௌனம் பரவிவிடும். சாப்பாட்டு வேளை தவறிவிட்டதால் உதிரிகள் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காப்பி சாப்பிட வரும் வாடிக்கைக்காரர்கள் தவிர, வேறு நடமாட்டம் இராது. சாயந்திரப் பரபரப்பிற்குத் தயாராவது போல் எல்லாரிடமும் ஒரு சாவதானம் தெரியும்.
வெளியே ப்ளைவுட் அடித்துத் தடுத்திருக்கும் ஃபேமிலி ரூமில் சர்வர்கள் மாநாடு கூடிவிடும். அரட்டைக் கச்சேரியின் மெயின் அயிட்டம் நேற்றுப் பார்த்த சினிமா, அதை விட்டால் சினிமா சம்பந்தப்பட்ட பாலிடிக்ஸ்.
ரங்கையர்தான் அவர்களை வேலையில் முடுக்கிவிடும் சாவி. அவரைப் பார்த்தால் கூட அந்நேரத்தில் யாரும் காணாத மாதிரி நழுவி விடுவார்கள், ரங்கையரும் கண்டுகொள்ள மாட்டார்.
லெட்ரீனுக்குப் போய்விட்டு டப்பாவை வைத்துக் குழாயடியில் கால் அலம்பியவாறு சுப்பண்ணா சமையலறைக்குள் நுழைந்தார். பாபாவை நெருங்கியதும் நின்று அவன் படிக்கிற புத்தகத்தை எட்டிப் பார்த்தார்.
“என்ன பாபா புத்தகம்?”
அவன் வெட்கத்தோடு சிரித்தான்.
“கதை புஸ்தகமா?”
அவன் புத்தகத்தை மடித்து நீட்டினான். வாழை இலை அரிந்து கொண்டே ரங்கையர் எட்டிப் பார்த்தார்.
வி.மயாக்கோவ்ஸ்க்கிய் என்று பெயரும் ஒரு பட்டாம்பூச்சிக்கு வலை போட்டடி ஓடும் ஒரு சிறுவன் படமும் தெரிந்தன. கீழே கொட்டை எழுத்தில் தலைப்பு போட்டிருந்தது. “நல்லது என்றால் என்ன? கெட்டது என்றால் என்ன?”
“கொழந்தைங்க புஸ்தகம். இதை எங்கேடா பிடிச்சே?”
“புஸ்தகக் கண்காட்சியிலே வாங்கினேன்.”
“என்ன விலை!”
“எண்பது பைசா.”
“எண்பது பைசாக்குள்ளே நல்லது கெட்டது என்னன்னு தெரிஞ்சுக்க வாங்கினாயாக்கும்... அதுவரையிலே உத்தமம்தான். வைத்தா மாதிரி ஒரு சினிமாக் கழிசடையைக் கட்டிண்டு அழாமே, இதைப் படிக்கிறியே...” என்று வைத்தாவைச் சீண்டினார் சுப்பண்ணா.
“ஒம்ம விமரிசனம் என்ன... நீர் மறியல் போராட்டம் பண்ணினீர்னாலும் பத்திரிகை ப்ரிண்ட் ஆகாமெ நிக்கப் போறதில்லே. நானும் படிக்காம விடப் போறதில்லை” என்று பத்திரிகையிலிருந்து முகத்தைத் திருப்பாமலேயே பதிலளித்தான் வைத்தா.
“அதான் ஏற்கெனவே நாரா நரம்பா உருகிப் போயிருக்கியே இன்னும் ஏண்டா சினிமாக்காரிகளைப் பாத்துப் பாத்து எளைச்சுப் போறே வைத்தா?”
மாதவன் உள்ளே வந்து அரட்டையில் கலந்து கொண்டான்.
“அவன் இன்னமும் உருகி உயிரை விட்டுடாமே வச்சுண்டிருக்கிறதுக்குக் காரணமே சினிமா நடிகைகள்தான் மாமா.”
“இதோ வந்துட்டார் விஞ்ஞான மேதை!” - விமரிசனத்தை மட்டும் உதிர்த்தானே ஒழிய, வைத்தா பத்திரியைலிருந்து கண்ணைத் திருப்பவில்லை.
“எப்படிடா சாரங்கா...?” என்று கேட்டு விட்டு தமாஷ் பார்க்க விரும்பினார் சுப்பண்ணா.
“என்னிக்காவது ஒரு நாள் அந்த நடிகைகள் ஒவ்வொருத்தியோடேயும் ஒரு லவ் சீன்லேயாவது நடிக்கணும்னு வைத்தாவுக்கு ஒரு லட்சியம். அதுதான்அவன் உசிரை அந்த ஒடம்பிலே ஒட்ட வச்சுண்டிருக்கு.”
“என்ன பிரமாதமான கண்டுபிடிப்பு” - வைத்தா படித்துக் கொண்டேதான் இருந்தான்.
‘இல்லேன்னு அடிச்சச் சொல்ல முடியுமா?”
“எதுக்குச் சொல்லணும்...?” வைத்தா படித்துக் கொண்டே பதில் தந்தான்.
“வைத்தா மாமா... ஒரு டபிள் ஸ்ட்ராங்க” என்று சர்வர் மணி வந்து நின்றான்.
“யாருக்கு... அக்பர் ரைஸ் மில்லா?” என்ற பத்திரிகையை மடித்துக் கீழே வைத்து விட்டு, டபரா செட்டைத் தூக்கினான் வைத்தா.
“அதெப்படி... அவ்வளவு கரெக்டா கேட்டுட்டே?”
“ரெண்டரை மணிக்கு மூதேவி அடிக்கும்போது அக்பர் ரைஸ் மில்காரர் தான் டபிள் ஸ்ட்ராங் காப்பி சாப்பிட வருவார்.”
ரங்கையர் இலை அரிந்து கொண்டிருப்பதைச் சுப்பண்ணா அப்போதுதான் கவனித்தார். அவருக்கு எதிரில் உட்கார்ந்தார்.
“பாபா, அந்த வெங்காயம் நறுக்கற கத்தியை எடு.”
பாபா எடுத்துத் தந்தான்.
“என்ன இந்நேரத்திலே.. வயத்துக் கோளாறா?”
ரங்கையர், லெட்ரீனுக்குப் போய் வந்ததைக் குறித்துக் கேட்கிறார் என்ற உணர்ந்து கொண்டார்.
“இல்லேண்ணா... இப்பத்தான் சாவகாசமா டம் கெடைச்சது” - வாயை நன்றாகக் கொப்புளித்து விட்டு வந்தார். ஓய்வு நேரம், அவருடைய வெற்றிலைப் புகையிலைப் பிரயோகத்திற்கும் சேர்த்து.
அவர்கள் மத்தியில் இலைநார் கிழிபடும் ஓசை மட்டும் சில விநாடிகள் கேட்டன.
“டேபிள் க்ளீன்” என்று வெளியே இருந்து சர்வர் மணி கொள்ளை போகிற மாதிரி கத்தினான். புத்தகம் படித்துக் கொண்டிருந்த பாபா பக்கெட்டை எடுத்தான்.
“கல்லாவிலே யார் இருக்கா?” என்று சுப்பண்ணா கேட்டார்.
“ராஜா.”
“பெரியண்ணா?”
“தூங்கறார். நேத்தியிலிருந்து மார்வலிக்கிறது, ஆயாசமா இருக்குன்னு மத்தியானத்திலே படுத்துக்கறார்!”
லாவகமாக ஒதுங்கி வால் வாலாகக் கிழிந்திருந்த இலை நுனியை வெட்டி எறிந்தவாறே சுப்பண்ணா கேட்டார்.
“நேத்து ஜம்னா வந்தாளாமே?”
வைத்தா சினிமாப் பத்திரிகையில் மூழ்கிவிட்டான். சோம்பலாக இருக்கிறதென்று ஒரு காபி சாப்பிடுவதற்காக சமையல் கட்டுக்கு ராஜாமணி வந்தான். ஜமுனா பெயர் அடிபடவே அவர்கள் பேச்சுக் கெடாமல் இருக்கத் திரும்பி ஸ்டால் எதிரில் சுவரோரமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.
ஒட்டுக் கேட்கிற மாதிரியும் தெரியாது. பேச்சும் காதில் விழும்.
“ஆமாம்.”
“மாதவன் என்னமோ சொன்னான். நம்பிக்கைப் படல்லே.”
“என்னன்னு?”
“ஆனந்தலட்சுமி வந்திருக்காளாமே?”
ரங்கையர் திரும்பி ஒருமுறை யாராவது கவனிக்கிறார்களாவென்று பார்த்துக் கொண்டார்.
“ஆமாம்.”
“எப்படி இருக்காங்க?”
“ரொம்ப எளைச்சுப் போய் இருக்காங்க, பேரைச் சொல்லி அனுப்பலேன்னா நானே அடையாளம் கண்டுபிடிச்சிருக்க முடியாது. எப்படி இருந்த அழகு, என்னம்மா கரைஞ்சு போயிருக்கு அண்ணா?”
“பதினஞ்சு வருஷமாயிருக்குமா...?”
“இன்னும் அதிகமாயிருக்கும். ராஜா ஆறு வயசுக் கொழந்தை.”
“எங்கே இருக்காங்க? ஜீவனம் எப்படி?”
“திருவல்லிக்கேணியிலே இருந்திருக்காங்க. பத்துப் பதினஞ்சு ஆபீஸ்காரங்களுக்கு சமைச்சப் போட்டு சின்ன மெஸ் மாதிரி நடத்திக் காலத்தைக் கழிச்சிருக்காங்க. கூடவே ஒரு சித்தி இருந்தாளே, ஒமக்கு ஞாபகம் வர்றதா?”
“பேஷா... மூக்குக் கண்ணாடியும் மடிசார்ப் புடவையுமா ஒரு பாந்தமான முகம். ரங்கையன் மாதிரி ஆசாரசீலம் யாருக்கும் வராதுடாப்பான்னு ஓயாமே உங்களைப் பத்தி பேசுவாங்கண்ணா...”
ரங்கையர் தலை குனிந்தவாறு இலையைக் கிழித்தார். பின்பு நிமிர்ந்து சொன்னார்:
“அவ போன மாசம் காலமாயிட்டாளாம்.”
“அட மகாதேவா... சிவ சிவ...”
“கைக்கு ஒதவி அள் இல்லாமே மெஸ் நடத்த வசதிப்படல்லே. ஆனந்தலட்சுமி மெஸ்ஸை மூடிட்டாங்களாம்.”
“இங்கே வந்திருக்கிற நோக்கம்?”
“வடக்கே கேதார்நாத் பசுபதிநாத்துண்ணு அப்படியே யாத்திரை கிளம்பி காசியிலே பிராணனை விடணும்னு உத்தேசம். திரும்பி இங்கே வர்ற அபிப்பிராயம் காணோம். அதுதான் கடைசித் தடவையா எல்லோரையும் பார்த்துட்டுப் போக வந்திருக்கா.”
“பெரியண்ணா போய்ப் பார்ததாரோ?”
அந்த நேரத்தில் மூலையில் உட்கார்ந்திருந்த ராஜாமணி எதிரில் சாரங்கள் வந்து நின்றான்.
“உஸ்ஸ்” என்று சத்தம் வராமல் ஜாடை காட்டி அவனை அகன்று போகச் சொன்னான் ராஜாமணி. சாரங்கனுக்கு ஏன் ராஜாமணி போகச் சொல்கிறான் என்று புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான், ராஜாமணியின் கவனத்தைக் கவர்கிற எதுவும் எங்கும் தென்படவில்லை. சுப்பண்ணாவும் ரங்கையரும் இலை அரிந்து கொண்டிருக்கிற காட்சியில் சுவாரஸ்யம் தெரியவில்லை.
‘இது என்னமோ ஒரு மூட்’ என்று சாரங்கன் அகன்றான்.
“நேத்து வீட்டுக்கு வந்தார். ஆனந்தலட்சுமி இருக்கிற நெலமையைப் பார்த்ததுமே அவர் கண்ணிலே பொல பொலன்னு ஜலம் வந்துடுத்து...”
“இருக்காதா பின்னே... எவ்வளவு பிரியமா இருந்தாரு அவகிட்டே. ஒரு வழியிலே பார்த்தா இந்த ஓட்டலே அவள் பேரிலே தானேண்ணா ஓடறது...”
ராஜாமணிக்கு மாடியில் இருந்த கிடங்கு அறையில் நியூ பாரத் கபே என்று எனாமல் அரித்த பழைய போர்டு ஒன்று கிடப்பது ஞாபகம் வந்தது. அதுதான் ஆனந்தபவனின் பழைய பெயர்.
“இங்கேயே இருந்துடச் சொல்லி பெரியண்ணா அவகிட்டே கேக்கலியா?”
“எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு. கங்காபாய்க்கு இந்த வயசிலே இனிமே நீ ஒரு போட்டி ஆகமாட்டேன்னாரு...”
சுப்பண்ணா மௌனமானார்.
“ஆனந்தலட்சுமி துளிகூட ஒப்புக்கலே. பிடிவாதமா இருக்கா... பெரியண்ணாவுக்கு மனசு ஒடைஞ்சுட்டது. நேத்தியிலே இருந்து பெரிய சீக்கிலே விழுந்த மாதிரி ஆயிட்டார்...”
ராஜாமணிக்கு அதற்குமேல் அங்கே உட்கார முடியவில்லை. ஓசைப்படாமல் எழுந்து கல்லா மேடைக்குப் போனான். திறக்கக் கூடாத கதவு ஒன்றைத் திறந்து, அந்தரங்கமான எதையோ எட்டிப் பார்த்துவிட்ட மாதிரி அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கல்லா மேஜையில் உட்கார்ந்து எதிரே தெரிந்த இன்றைய ஸ்பெஷல் போர்டைப் பார்த்தான்.
ஆனந்த பவன்.
இந்தப் பெயரை மாற்றுகிற அளவு ஒருத்திக்கு அப்பாவிடம் சொந்தம் இருந்ததா? அது எப்பேர்ப்பட்ட சொந்தம்...? சே...! நான் அதை ஒட்டுக் கேட்டிருக்க வேண்டாம்... அம்மா கங்காபாயின் முகம் அவனது மனசில் மூக்குக் கண்ணாடியோடு ஒடிசல் உருவம் ஆனந்தராவின் மீது பக்தியும் அன்புமாக வைத்திருக்கிற பாசத்தோடு தோன்றிற்று. மறுகணம் முகம் தெரியாத ஒருத்தி திருவல்லிக்கேணியில் ஒரு சந்தில் பத்துப் பேருக்கு சமைத்துப் போட்டுக் கொண்டிருந்துவிட்டு, உறவும் துணையும் இன்றி கங்கைக் கரையில், காசிச் சத்திரங்களில் ஏதோ ஒன்றில் மரணத்தின் வருகையை எதிர்பார்க்கும் காட்சி தோன்றியது.
இப்படிப்பட்ட சிதிலங்கள் கூட இந்த வாழ்க்கையில் உண்டா என்று அவன் திகைத்தான்.
வாழையிலைக் கட்டுக்குப் போட்டிருந்த நார்க்கட்டை பேனாக் கத்தியால் அறுத்தார் ரங்கையர். மூன்று கட்டுகள். கட்டு அறுந்தும் சிறைவாசம் நீங்கிய ஆசுவாசத்தோடு வாழையிலைகள் விரிந்து கொடுத்தன. நல்ல கிளிப் பச்சை நிறத்தில், தொட்டுப் பார்ப்பதிலேயே ஒரு சுகமும் ஆசையும் தூண்டும் மிருது. ஆனந்தபவனில் மட்டும்தான் அந்த இலையில் சாப்பிடும் இதம் கிடைக்கும்.
காலையில் ஒடுகத்தூரிலிருந்து வரும் முதல் சிங்கிளில் எஸ்.கே.பி.எம் டிரைவர் கோவிந்தன் கொண்டு வந்து இறக்கி விடுவான். வருஷக் கணக்கு ரங்கையருக்கு ஞாபகமில்லை. ரொம்ப நாளாக நடக்கும் மாமூல் அது, ஸ்டாண்டில் பஸ்ஸை நிறுத்தி விட்டு, கோவிந்து பல்துலக்க ஆனந்தபவனுக்கு வருவான்.
ஸ்டாலுக்கு எதிர் டேபிளில் தான் உட்காருவான். அந்த டேபிளுக்கு யார் சர்வராக இருந்தாலும் ரங்கையர்தான் கோவிந்துவைக் கவனிப்பார். அவர் கையில் பலகாரம் சாப்பிடாமல் போய்விட்டால் ஏதாவது ஒரு ஆக்ஸிடென்ட்டோ, தகராறோ நடக்கப் போகிறது என்று கோவிந்து கண்டுபிடித்து வைத்திருந்தான்.
ஒடுகத்தூர் வாழைத் தோட்டங்களில் ஆனந்தபவனுக்கேற்ற வாழை மரங்களை பஸ்ஸில் போகும் போதும் வரும்போதும் கவனித்துக் கொண்டு போவான். டிரைவர் வேலையிலிருந்து கொண்டே பையனைப் படிக்க வைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக்கிவிட்டான். கந்திலியில்தான் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனுக்கு வேலையாகி இருந்தது.
கிருஷ்ணனும் ஹாஸ்டலில் இடம் கிடைக்காமல் ஆனந்தபவன் சாப்பாட்டில்தான் காலேஜ் முடித்தவன். எனவே இன்றைக்கும் அவனுக்கு ஒரு காரியரில் நாள்தோறும் இரண்டு வேளை. வண்டியில் சாப்பாடு போகிறது.
காலையில் டிபன் சாப்பிடும் போது பெரிய பெண் பிரசவத்திற்கு வீடு வந்திருப்பதையும், கிருஷ்ணனுக்கு நிச்சயதார்த்தம் செய்ய யோசிப்பதையும் ரங்கையரிடம் சொல்லியிருந்தான் கோவிந்து.
வழக்கமாக வாழையிலைக் கட்டை அறுக்கும் போதெல்லாம் ரங்கையருக்கு கோவிந்துவின் குடும்ப ஞாபகம் வரும், ஆனந்தபவனின் தொழில் சக்கரம் இயங்க, இப்படிப் பல சின்னஞ்சிறு பல்சக்கரங்கள். ஒன்றை ஒன்று தள்ள, ஆனந்தபவனின் இயக்கத்தில் அந்தரங்க சுத்தியான பிரீதியோடு உருளுகின்ற பல்சக்கரங்கள்.
சாயந்திர டிபனுக்காகக் கொஞ்ச இலைகளை ஒதுக்கிவிட்டு மீதியை ராத்திரி சாப்பாட்டிற்காக ஒதுக்கினார். நீளவாக்கில் இருந்த இலைகளை மும்மூன்றாக வகிர்ந்து கொண்டே சமையல் கட்டைச் சுற்றி நோட்டம் விட்டார் ரங்கையர். வைத்தா காப்பி அடுப்பின் முன்னே ஸ்டூலில் உட்கார்ந்தவாறு சினிமாப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான். டபரா செட்டுகள் காப்டனுக்கு முன்னே நிற்கும் பட்டாள அணிவகுப்பு மாதிரி வரிசை வரிசையாக நின்றன.
அடுப்பில் பால் காய்ந்தது. சந்தை நாள் என்று அரிசி மூன்றுபடி அதிகமாக வேக வைத்து விட்டார்கள் சாப்பாட்டு ரேட் ஏறிவிட்டதால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் பல பேர் சாப்பிட வரவில்லை. சாதமும் சாம்பாரும் மீந்துவிட்டன. சர்வர் மணி வாழை இலை வைத்து, சட்னி வழித்துக் கொண்டிருந்தான். அவனைத் தவிர வேறு சர்வர் யாரையும் காணோம்.
டிபன் அடுப்பில் வெந்நீர் காய்ந்து கொண்டிருந்தது. ஊமை நெருப்பில் குருவி இறகு போல் சாம்பல் மூடிக் கிடந்தது.
க்ளீனர் பாபா அராபிய அடிமை மாதிரி மார்பின் மேல் கையைக் கட்டிக் கொண்டு, பில் எழுதும் டெஸ்கிற்கு மேல் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தான். ஏழிலிருந்து பத்து மணிவரை ஏதோ அடிதடி நடக்கிற மாதிரி இயங்கிய சமையல்கட்டு விச்ராந்தியாக ஓய்வெடுத்தது.
மத்தியானம் இரண்டரை மணியானால் ஆனந்த பவனில் இப்படி ஒரு மௌனம் பரவிவிடும். சாப்பாட்டு வேளை தவறிவிட்டதால் உதிரிகள் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காப்பி சாப்பிட வரும் வாடிக்கைக்காரர்கள் தவிர, வேறு நடமாட்டம் இராது. சாயந்திரப் பரபரப்பிற்குத் தயாராவது போல் எல்லாரிடமும் ஒரு சாவதானம் தெரியும்.
வெளியே ப்ளைவுட் அடித்துத் தடுத்திருக்கும் ஃபேமிலி ரூமில் சர்வர்கள் மாநாடு கூடிவிடும். அரட்டைக் கச்சேரியின் மெயின் அயிட்டம் நேற்றுப் பார்த்த சினிமா, அதை விட்டால் சினிமா சம்பந்தப்பட்ட பாலிடிக்ஸ்.
ரங்கையர்தான் அவர்களை வேலையில் முடுக்கிவிடும் சாவி. அவரைப் பார்த்தால் கூட அந்நேரத்தில் யாரும் காணாத மாதிரி நழுவி விடுவார்கள், ரங்கையரும் கண்டுகொள்ள மாட்டார்.
லெட்ரீனுக்குப் போய்விட்டு டப்பாவை வைத்துக் குழாயடியில் கால் அலம்பியவாறு சுப்பண்ணா சமையலறைக்குள் நுழைந்தார். பாபாவை நெருங்கியதும் நின்று அவன் படிக்கிற புத்தகத்தை எட்டிப் பார்த்தார்.
“என்ன பாபா புத்தகம்?”
அவன் வெட்கத்தோடு சிரித்தான்.
“கதை புஸ்தகமா?”
அவன் புத்தகத்தை மடித்து நீட்டினான். வாழை இலை அரிந்து கொண்டே ரங்கையர் எட்டிப் பார்த்தார்.
வி.மயாக்கோவ்ஸ்க்கிய் என்று பெயரும் ஒரு பட்டாம்பூச்சிக்கு வலை போட்டடி ஓடும் ஒரு சிறுவன் படமும் தெரிந்தன. கீழே கொட்டை எழுத்தில் தலைப்பு போட்டிருந்தது. “நல்லது என்றால் என்ன? கெட்டது என்றால் என்ன?”
“கொழந்தைங்க புஸ்தகம். இதை எங்கேடா பிடிச்சே?”
“புஸ்தகக் கண்காட்சியிலே வாங்கினேன்.”
“என்ன விலை!”
“எண்பது பைசா.”
“எண்பது பைசாக்குள்ளே நல்லது கெட்டது என்னன்னு தெரிஞ்சுக்க வாங்கினாயாக்கும்... அதுவரையிலே உத்தமம்தான். வைத்தா மாதிரி ஒரு சினிமாக் கழிசடையைக் கட்டிண்டு அழாமே, இதைப் படிக்கிறியே...” என்று வைத்தாவைச் சீண்டினார் சுப்பண்ணா.
“ஒம்ம விமரிசனம் என்ன... நீர் மறியல் போராட்டம் பண்ணினீர்னாலும் பத்திரிகை ப்ரிண்ட் ஆகாமெ நிக்கப் போறதில்லே. நானும் படிக்காம விடப் போறதில்லை” என்று பத்திரிகையிலிருந்து முகத்தைத் திருப்பாமலேயே பதிலளித்தான் வைத்தா.
“அதான் ஏற்கெனவே நாரா நரம்பா உருகிப் போயிருக்கியே இன்னும் ஏண்டா சினிமாக்காரிகளைப் பாத்துப் பாத்து எளைச்சுப் போறே வைத்தா?”
மாதவன் உள்ளே வந்து அரட்டையில் கலந்து கொண்டான்.
“அவன் இன்னமும் உருகி உயிரை விட்டுடாமே வச்சுண்டிருக்கிறதுக்குக் காரணமே சினிமா நடிகைகள்தான் மாமா.”
“இதோ வந்துட்டார் விஞ்ஞான மேதை!” - விமரிசனத்தை மட்டும் உதிர்த்தானே ஒழிய, வைத்தா பத்திரியைலிருந்து கண்ணைத் திருப்பவில்லை.
“எப்படிடா சாரங்கா...?” என்று கேட்டு விட்டு தமாஷ் பார்க்க விரும்பினார் சுப்பண்ணா.
“என்னிக்காவது ஒரு நாள் அந்த நடிகைகள் ஒவ்வொருத்தியோடேயும் ஒரு லவ் சீன்லேயாவது நடிக்கணும்னு வைத்தாவுக்கு ஒரு லட்சியம். அதுதான்அவன் உசிரை அந்த ஒடம்பிலே ஒட்ட வச்சுண்டிருக்கு.”
“என்ன பிரமாதமான கண்டுபிடிப்பு” - வைத்தா படித்துக் கொண்டேதான் இருந்தான்.
‘இல்லேன்னு அடிச்சச் சொல்ல முடியுமா?”
“எதுக்குச் சொல்லணும்...?” வைத்தா படித்துக் கொண்டே பதில் தந்தான்.
“வைத்தா மாமா... ஒரு டபிள் ஸ்ட்ராங்க” என்று சர்வர் மணி வந்து நின்றான்.
“யாருக்கு... அக்பர் ரைஸ் மில்லா?” என்ற பத்திரிகையை மடித்துக் கீழே வைத்து விட்டு, டபரா செட்டைத் தூக்கினான் வைத்தா.
“அதெப்படி... அவ்வளவு கரெக்டா கேட்டுட்டே?”
“ரெண்டரை மணிக்கு மூதேவி அடிக்கும்போது அக்பர் ரைஸ் மில்காரர் தான் டபிள் ஸ்ட்ராங் காப்பி சாப்பிட வருவார்.”
ரங்கையர் இலை அரிந்து கொண்டிருப்பதைச் சுப்பண்ணா அப்போதுதான் கவனித்தார். அவருக்கு எதிரில் உட்கார்ந்தார்.
“பாபா, அந்த வெங்காயம் நறுக்கற கத்தியை எடு.”
பாபா எடுத்துத் தந்தான்.
“என்ன இந்நேரத்திலே.. வயத்துக் கோளாறா?”
ரங்கையர், லெட்ரீனுக்குப் போய் வந்ததைக் குறித்துக் கேட்கிறார் என்ற உணர்ந்து கொண்டார்.
“இல்லேண்ணா... இப்பத்தான் சாவகாசமா டம் கெடைச்சது” - வாயை நன்றாகக் கொப்புளித்து விட்டு வந்தார். ஓய்வு நேரம், அவருடைய வெற்றிலைப் புகையிலைப் பிரயோகத்திற்கும் சேர்த்து.
அவர்கள் மத்தியில் இலைநார் கிழிபடும் ஓசை மட்டும் சில விநாடிகள் கேட்டன.
“டேபிள் க்ளீன்” என்று வெளியே இருந்து சர்வர் மணி கொள்ளை போகிற மாதிரி கத்தினான். புத்தகம் படித்துக் கொண்டிருந்த பாபா பக்கெட்டை எடுத்தான்.
“கல்லாவிலே யார் இருக்கா?” என்று சுப்பண்ணா கேட்டார்.
“ராஜா.”
“பெரியண்ணா?”
“தூங்கறார். நேத்தியிலிருந்து மார்வலிக்கிறது, ஆயாசமா இருக்குன்னு மத்தியானத்திலே படுத்துக்கறார்!”
லாவகமாக ஒதுங்கி வால் வாலாகக் கிழிந்திருந்த இலை நுனியை வெட்டி எறிந்தவாறே சுப்பண்ணா கேட்டார்.
“நேத்து ஜம்னா வந்தாளாமே?”
வைத்தா சினிமாப் பத்திரிகையில் மூழ்கிவிட்டான். சோம்பலாக இருக்கிறதென்று ஒரு காபி சாப்பிடுவதற்காக சமையல் கட்டுக்கு ராஜாமணி வந்தான். ஜமுனா பெயர் அடிபடவே அவர்கள் பேச்சுக் கெடாமல் இருக்கத் திரும்பி ஸ்டால் எதிரில் சுவரோரமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.
ஒட்டுக் கேட்கிற மாதிரியும் தெரியாது. பேச்சும் காதில் விழும்.
“ஆமாம்.”
“மாதவன் என்னமோ சொன்னான். நம்பிக்கைப் படல்லே.”
“என்னன்னு?”
“ஆனந்தலட்சுமி வந்திருக்காளாமே?”
ரங்கையர் திரும்பி ஒருமுறை யாராவது கவனிக்கிறார்களாவென்று பார்த்துக் கொண்டார்.
“ஆமாம்.”
“எப்படி இருக்காங்க?”
“ரொம்ப எளைச்சுப் போய் இருக்காங்க, பேரைச் சொல்லி அனுப்பலேன்னா நானே அடையாளம் கண்டுபிடிச்சிருக்க முடியாது. எப்படி இருந்த அழகு, என்னம்மா கரைஞ்சு போயிருக்கு அண்ணா?”
“பதினஞ்சு வருஷமாயிருக்குமா...?”
“இன்னும் அதிகமாயிருக்கும். ராஜா ஆறு வயசுக் கொழந்தை.”
“எங்கே இருக்காங்க? ஜீவனம் எப்படி?”
“திருவல்லிக்கேணியிலே இருந்திருக்காங்க. பத்துப் பதினஞ்சு ஆபீஸ்காரங்களுக்கு சமைச்சப் போட்டு சின்ன மெஸ் மாதிரி நடத்திக் காலத்தைக் கழிச்சிருக்காங்க. கூடவே ஒரு சித்தி இருந்தாளே, ஒமக்கு ஞாபகம் வர்றதா?”
“பேஷா... மூக்குக் கண்ணாடியும் மடிசார்ப் புடவையுமா ஒரு பாந்தமான முகம். ரங்கையன் மாதிரி ஆசாரசீலம் யாருக்கும் வராதுடாப்பான்னு ஓயாமே உங்களைப் பத்தி பேசுவாங்கண்ணா...”
ரங்கையர் தலை குனிந்தவாறு இலையைக் கிழித்தார். பின்பு நிமிர்ந்து சொன்னார்:
“அவ போன மாசம் காலமாயிட்டாளாம்.”
“அட மகாதேவா... சிவ சிவ...”
“கைக்கு ஒதவி அள் இல்லாமே மெஸ் நடத்த வசதிப்படல்லே. ஆனந்தலட்சுமி மெஸ்ஸை மூடிட்டாங்களாம்.”
“இங்கே வந்திருக்கிற நோக்கம்?”
“வடக்கே கேதார்நாத் பசுபதிநாத்துண்ணு அப்படியே யாத்திரை கிளம்பி காசியிலே பிராணனை விடணும்னு உத்தேசம். திரும்பி இங்கே வர்ற அபிப்பிராயம் காணோம். அதுதான் கடைசித் தடவையா எல்லோரையும் பார்த்துட்டுப் போக வந்திருக்கா.”
“பெரியண்ணா போய்ப் பார்ததாரோ?”
அந்த நேரத்தில் மூலையில் உட்கார்ந்திருந்த ராஜாமணி எதிரில் சாரங்கள் வந்து நின்றான்.
“உஸ்ஸ்” என்று சத்தம் வராமல் ஜாடை காட்டி அவனை அகன்று போகச் சொன்னான் ராஜாமணி. சாரங்கனுக்கு ஏன் ராஜாமணி போகச் சொல்கிறான் என்று புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான், ராஜாமணியின் கவனத்தைக் கவர்கிற எதுவும் எங்கும் தென்படவில்லை. சுப்பண்ணாவும் ரங்கையரும் இலை அரிந்து கொண்டிருக்கிற காட்சியில் சுவாரஸ்யம் தெரியவில்லை.
‘இது என்னமோ ஒரு மூட்’ என்று சாரங்கன் அகன்றான்.
“நேத்து வீட்டுக்கு வந்தார். ஆனந்தலட்சுமி இருக்கிற நெலமையைப் பார்த்ததுமே அவர் கண்ணிலே பொல பொலன்னு ஜலம் வந்துடுத்து...”
“இருக்காதா பின்னே... எவ்வளவு பிரியமா இருந்தாரு அவகிட்டே. ஒரு வழியிலே பார்த்தா இந்த ஓட்டலே அவள் பேரிலே தானேண்ணா ஓடறது...”
ராஜாமணிக்கு மாடியில் இருந்த கிடங்கு அறையில் நியூ பாரத் கபே என்று எனாமல் அரித்த பழைய போர்டு ஒன்று கிடப்பது ஞாபகம் வந்தது. அதுதான் ஆனந்தபவனின் பழைய பெயர்.
“இங்கேயே இருந்துடச் சொல்லி பெரியண்ணா அவகிட்டே கேக்கலியா?”
“எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு. கங்காபாய்க்கு இந்த வயசிலே இனிமே நீ ஒரு போட்டி ஆகமாட்டேன்னாரு...”
சுப்பண்ணா மௌனமானார்.
“ஆனந்தலட்சுமி துளிகூட ஒப்புக்கலே. பிடிவாதமா இருக்கா... பெரியண்ணாவுக்கு மனசு ஒடைஞ்சுட்டது. நேத்தியிலே இருந்து பெரிய சீக்கிலே விழுந்த மாதிரி ஆயிட்டார்...”
ராஜாமணிக்கு அதற்குமேல் அங்கே உட்கார முடியவில்லை. ஓசைப்படாமல் எழுந்து கல்லா மேடைக்குப் போனான். திறக்கக் கூடாத கதவு ஒன்றைத் திறந்து, அந்தரங்கமான எதையோ எட்டிப் பார்த்துவிட்ட மாதிரி அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கல்லா மேஜையில் உட்கார்ந்து எதிரே தெரிந்த இன்றைய ஸ்பெஷல் போர்டைப் பார்த்தான்.
ஆனந்த பவன்.
இந்தப் பெயரை மாற்றுகிற அளவு ஒருத்திக்கு அப்பாவிடம் சொந்தம் இருந்ததா? அது எப்பேர்ப்பட்ட சொந்தம்...? சே...! நான் அதை ஒட்டுக் கேட்டிருக்க வேண்டாம்... அம்மா கங்காபாயின் முகம் அவனது மனசில் மூக்குக் கண்ணாடியோடு ஒடிசல் உருவம் ஆனந்தராவின் மீது பக்தியும் அன்புமாக வைத்திருக்கிற பாசத்தோடு தோன்றிற்று. மறுகணம் முகம் தெரியாத ஒருத்தி திருவல்லிக்கேணியில் ஒரு சந்தில் பத்துப் பேருக்கு சமைத்துப் போட்டுக் கொண்டிருந்துவிட்டு, உறவும் துணையும் இன்றி கங்கைக் கரையில், காசிச் சத்திரங்களில் ஏதோ ஒன்றில் மரணத்தின் வருகையை எதிர்பார்க்கும் காட்சி தோன்றியது.
இப்படிப்பட்ட சிதிலங்கள் கூட இந்த வாழ்க்கையில் உண்டா என்று அவன் திகைத்தான்.
No comments:
Post a Comment