4
“சேது லெட்டர் போட்டிருக்காண்டா ராஜா” என்று ராஜாமணி சாக்ஸைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது சொன்னாள் கங்கா பாய்.
“என்னவாம்?” என்று அசிரத்தையோடு கேட்டான் ராஜாமணி. அவன் குரலில் தெரிந்த அசுவாரஸ்யமும் அலட்சியமும் கங்கா பாய்க்கு சுருக் என்று தைத்தன.
அவள் நடை வாசற்படியில் தெரிந்த ராஜாமணியின் உருவத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு நெடுமூச்செறிந்தாள். இரண்டு சகோதரர்களுக்கும் மத்தியில் துளிக்கூட பந்தமில்லாமல் இருப்பது அந்த தாய் உள்ளத்தை வருத்தியது.
சீடைக்காகப் பிசைந்து வைத்திருந்த மாவில் சிறுசு சிறுசாக உருண்டை உருட்டிக் கொண்டிருந்தாள் கங்காபாய். அவள் ஒரு சீடை ஸ்பெஷலிஸ்ட். ஆனந்தராவுக்கு சீடை என்றால் மிகவும் பிடிக்கும். மாதத்துக்கு ஒரு தரம் இரண்டு தரம் ஒரு பெரிய டின்னில் செய்து கொட்டி வைத்து விடுவாள். கறுமுறுவென்று பல்லில் பட்டதுமே நொறுங்கி விடுகிற மாதிரி கங்காபாய் சீடை தயார் செய்வாள்.
“என்னம்மா, பதிலே பேசலே? -” ராஜாமணி அம்மாவுக்கு நேரே கூடத்து ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தான்.
அவளுடைய ஒல்லியான உடம்பும் கண்ணாடி மாட்டிய கண்களும் தும்பைப் பூவாய் நரைத்த தலையும் கங்காபாயின் வயதை அதிகப்படுத்திக் காட்டின. பூஞ்சை உடம்பு, ஜலதோஷம் வந்தால் கூடத் தாங்காது. ஓடியாடி வேலை செய்து விட்டாளானால் ஒரு வாரம் படுத்துக் கொள்ள வேண்டியதுதான். தனக்கு இங்கே வலிக்கிறது இப்படியிருக்கிறது என்று ஒரு வார்த்தை வாய் திறந்து சொல்ல மாட்டாள். பூனை போல சுருண்டு படுத்துக் கொண்டு விடுவாள்.
அம்மா பதிலே பேசாததைக் கண்டதும் ராஜாமணிக்கு அவ்வளவு அலட்சியமாகத் தான் விசாரித்திருக்கக் கூடாது என்று பட்டது. என்ன இருந்தாலும் சேது அண்ணாவும் அவளுக்கு ஒரு மகன்தானே! அம்மாவின் பாசத்தில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு அல்லவா என்று உறைத்தது.
“அப்போ, நீ பேசப் போறதில்லே. மௌன விரதமாக்கும்... சரி, இரு. நீ மௌன விரதம் இருந்தா நான் உண்ணாவிரதம் இருக்கேன்...!”
கங்காபாய்க்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“நீ பெரிய காந்தி...! உண்ணாவிரதம் இருக்கப் போறே...”
“ஏம்மா... நான் காந்தியாக மாட்டேனா... மாட்டேன்னு சொல்லிடு... ஒரே வருஷத்தில் ஆயிக்காட்டிடறேன்...”
“ஒரு வாரத்துக்கு காந்தியா இருந்துட்டு அப்புறமா பிஸி பேளாஹூளி ஏம்மா செய்யலேன்னு சத்தம் போடுவே, அப்படித்தானே?”
“பெற்ற அன்னையே இவ்விதம் தன் மகனைப் புறக்கணித்தால் உலகம் எவ்விதம் மதிக்கப் போகிறது? அன்னையே... என் நெற்றியிலே வீரத்திலகம் இட்டு என்னைக் காந்தியாக ஆசீர்வதிக்க மாட்டாயா?” என்று நாடகக் கதாபாத்திரம் போல் வசனம் போசினான் ராஜாமணி.
கங்காபாய்க்குச் சிரிப்பு பொத்துக் கொண்டது. அவளை மசிய வைக்க இப்படி ஏதாவது செய்வான் அவன்.
“டிராமா கம்பெனிக்குப் போயிடு.”
“நான் டிராமாவில் சேர்ந்து விட்டால் டி.எஃப்.ஓ. ஆவது எப்படி? சொல் அம்மா சொல்...” என்று மறுபடியும் வசனம் பேசினான் ராஜாமணி.
இந்த வசனத்தால் கங்காபாயின் சிரிப்பு வற்றி விட்டது.
“நீ டி.எஃப்.ஓ. ஆயிடணும்னு துடிக்கிறே. சேதுவோ மாமனார் வீட்டு மாப்பிளையா கோயம்புத்தூர் ஓட்டலைப் பார்த்துண்டிருக்கான். அவருக்கும் வயசு ஆயிண்டே போறது. பதினெட்டு வருஷமா ராத்திரி பகல் பார்க்காமே, பிஸினஸைக் கட்டிண்டு ஒரு பக்கம் அழறார். நான் ஒருத்தி சீக்காளி, என்னையும் கட்டிண்டு, வாரத்துக்கு ரெண்டு நாள் எனக்கு சமைத்துப் போட்டுண்டு மாரடிக்கிறார். எங்க சந்தான பாக்கியம் அப்படியிருக்கு” என்று பெருமூச்செறிந்தாள் கங்காபாய்.
ராஜாமணி மெதுவாக ஊஞ்சலை உந்தி விட்டான். பழங்காலத்துச் சங்கிலி ஊஞ்சல், முன்னும் பின்னும் அசைய அசைய கிரீச் கிரீச் என்று சங்கிலி சத்தம் போட்டது.
“நான் என்னம்மா பண்ணட்டும்?”
“பண்றது என்னடா... உனக்கும் வயசாயிடுத்து. காலா காலத்திலே ஒரு கல்யாணம் பண்ணிண்டு ஓட்டலைப் பார்த்துக்கோ...”
ஒருமுறை உந்திவிட்டு ராஜாமணி ஊஞ்சலில் நீட்டிப் படுத்துக் கொண்டான். உறுதியான பர்மா தேக்கு, உட்கார்ந்தும் படுத்தும் ஊஞ்சல் பலகை மழமழவென்று தேய்ந்து போயிருந்தது. அந்த வழுவழுப்பை அனுபவிப்பதே ஒரு தனி சுகம்.
தலைக்குக் கீழே இரண்டு கைகளையும் கோர்த்து மடித்துக் கொண்டான் ராஜாமணி.
“ஓட்டலை என் தலையிலே கட்டறதுன்னு ஒங்களுக்குத் திட்டமிருந்தா, என்னை ஏம்மா காலேஜிலே சேர்த்தீங்க?”
ஊஞ்சல் வேகம் குன்றாமல் ஆடிற்று.
“காலேஜிலே படிச்சுட்டா என்னடா? போன வருஷம் பி.ஏ., படிச்சு ஃபெயிலாயி ஒருத்தன் சர்வரா வரல்லே?” - கங்காபாயின் தர்க்கம் அவனுக்கு கசப்பாய் இருந்தது.
“அப்ப பாஸ் பண்ணிட்டு நானும் சர்வரா போயிடட்டுமா?”
கங்காபாய் சீடை மாவை எண்ணெய் தொட்டு உருட்டி உருட்டிப் போட்டாள்.
“ஒன் கட்சியைத் தானே நீ பேசறே? பிள்ளைகளை வளர்த்து அவர் அடைஞ்ச சொகம் என்னடா?”
ராஜாமணி, கூடத்தில் ஓர் ஆணியில் மாட்டிய சரத்தில் தொங்கிய முத்துக்கிளி காற்றில் சுற்றுவதை வேடிக்கை பார்த்தான்.
“நான் பெரிய ஆபீசரானப்புறம் அந்த சொகத்தை நீங்க அனுபவிக்கத்தானே போறீங்க! நான் ஒண்ணும் சேது இல்லே, வசதியான மாமனார் வீடு கெடைச்சதும் அதுவே சொர்க்க லோகம்னு செட்டில் ஆயிட மாட்டேன்.”
சரிந்த மூக்குக் கண்ணாடியை நிமிர்த்தி விட்டுக் கொண்டு கங்காபாய் பேசினாள்.
“அவந்தான் போய்விட்டான். சொல்லிச் சொல்லிக்காட்டி. வந்துடப் போறானா...?” ஒங்க அப்பாவுக்கு நீயுவு அவனும் மட்டும் தான் பிள்ளைகள்னு நெனைச்சுடாதே. இந்த ஓட்டல்கூட ஒரு பிள்ளைதான். நீங்கள்ளாம் காப்பாத்தலேன்னாலும் அந்தப் பிள்ளை காப்பாத்தும்பார். கடைசியிலே அந்தக் கதிதான் அவருக்குக் கிடைக்கும் போலிருக்கு.”
இது அம்மாவின் வழக்கமான பல்லவி அல்ல என்று மட்டும் புரிந்தது. பெற்றோர்களின் மனக் குமைவு. அவர்களது அபிலாஷைகள் நொறுங்கும் சோகம். கடைசி காலத்தில் கிளைகள் வெட்டப்பட்டுத் தனித்திருக்கப் போகும் வெறுமை. இப்படி அவள் குரலில் என்னென்னவோ தெரிந்தன.
ராஜாமணி கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தான்.
வாழ்க்கை முழுவதும் ஆனந்த பவனின் கல்லாமேஜையில் பில் வாங்கிப் போட்டுக் கொண்டு, பிள்ளைகுட்டி பெற்று வயதாகித் தளர்ந்து ஆனந்த பவனின் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் வாழை இலைகளைப் போல் கனவுகளை வீசி எறிந்து விட்டு...
“மைகாட்” என்று அவன் வாய் முணுமுணுத்தது.
கிரிக்கெட் பிராக்டிஸ்... லெக்சரர் ராமபத்ரன்... டி.எஃப்.ஓ. சோமையா எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா...?
ஊஞ்சல் ஆட்டம் நின்று விட்டது.
அம்மா ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவள் மீண்டும் பேசினாள். அப்படி அவள் திடீர் திடீரென்று பேசுவாள்.
“இந்த ஓட்டலை நிலைச்ச நிக்க வைக்க அவர் என்ன பாடுபட்டிருக்கார் தெரியுமா? ஆரம்பத்திலே வேலூர் கோட்டையிலே கச்சேரிக்குப் பக்கத்திலே சின்ன தண்ணீர்ப் பந்தல் தானேடா வச்சிருந்தாரு!அப்ப எனக்குக் கல்யாணமாகி மொதல் வருஷம். ரங்கையனுக்கு பெரிய பையன் பொறந்துட்டிருந்தான். இப்ப கப்பல்லே தேசம் தேசமா சுத்திண்டிருக்கானே அந்த ராகவன் ரெண்டு மாசத்துக் கொழந்தை. ஒங்க அப்பா சரக்குப் போடுவார். ரங்கையன் சப்ளை பண்ணுவான். அன்னன்னிக்கு வியாபாரம் ஆயி லாபத்திலே ஒரு படி அரிசி, மளிகை சாமான், ஒண்ணே முக்காலணான்னு வாங்கிண்டு வருவார்.
இங்கே ஓட்டல் நடத்தக் கட்டடம் காலியா இருக்குன்னு சுப்பண்ணா வந்து கூப்பிட்டான். நன்னா நடந்துண்டிருக்கிற தண்ணீர்ப் பந்தலை மூட முடியாதுண்ணு அடிச்சுச் சொல்லிட்டார். விதி யாரை விட்டது? இங்கே இப்படி ஒரு ஓட்டல் நடத்தியாகணும்னு எழுத்து இருக்கறச்சே... மாத்த முடியுமா?”
கங்காபாய் பழைய காலத்தில் மூழ்கி விட்டாள்.
“ஒரு வருஷத்துக்கு ஒரு தபா கடையை மூடிடலாம்னு பார்க்கறேன் கங்காண்ணு அலுத்துப்பார். ஏகமானியா செலவு அப்ப என்ன... இட்லி அரைரூபா... காப்பி ஒன்னரை ரூபா... ஜனங்கிட்ட காசு நடமாட்டம் அதிகமில்லே... இவரோ தொழிலுக்கு புதுச... எந்த லகானை இழுத்துப் பிடிச்சா வண்டி ஓடும்னு தெரியாது. ம்ம்ம்... எல்லாம் பெரிய பாரதம்... மனசை அவர் விடும்போதெல்லாம் நான் தைரியம் தந்தேன். ஓட்டல்லே வேலை செய்யற பிள்ளைங்க ஒத்தாசையா நின்னாங்க... இல்லேன்னா நீ எங்கே காலேஜ் படிச்சிருக்கப் போறே... அவர் மாதிரியே தண்ணீர்ப் பந்தல் தொறந்திருப்பியோ... இல்லே, குமாஸ்தா உத்தியோகத்துக்கு மனுப் போட்டிண்டிருப்பியோ...”
ராஜாமணி யோசனையில் மூழ்கினான்.
ராமபத்ரன் அடிக்கடி லெக்சர்களின் போது சொல்வார்.
“இந்திய வாழ்க்கையில் சுதந்திரம் இல்லை. தகப்பனாரும் குடும்பமும் இங்கே பிரிக்க முடியாத தளைகள், எந்த இளைஞனும் அதிலிருந்துதப்பிச்சு ஓட முடியாது. இண்டிவிஜுவல் ஃப்ரீடம்னு நீங்க கற்பனை செய்யறதெல்லாம் ஒரு மிரேஜ். கானல் நீர். ரொமாண்டிக் ஆஸ்பிரேஷன் இருக்கறவங்களையெல்லாம் இங்கே றெக்கையைக் கத்தரிச்சுட்டு பறக்க விடுவாங்க, எவனாவது ஒரு ரெபல் பிச்சுண்டு வெளியே கிளம்பினாலும் அவனுடைய ஃபிளைட் பாதி தூரம் போறதுக்குள்ளே அவனைக் காபரா படுத்தி விடும். எமோஷனல் ஸெக்யூரிடி இல்லாததாலே சாமியே சரணம்னு அவன் மறுபடியும் குடும்பத்திலே வந்து விழுந்துடுவான்.”
ராமபத்ரன் பார்வை எவ்வளவு கூர்மையான கழுகுப் õர்வை என்று நினைத்துக் கொண்டான்.
சரத்தில் முத்துக்கிளி மெல்ல அசைந்தாடியதைக் கவனித்தான். அது வென்டிலேட்டர் வழியாக வீசிய காற்றில் வட்டமாகச் சுற்றியது. பத்து வருஷத்துக்கு முன்பு கங்காபாய் பொழுது போகாமல் செய்து மாட்டியது அது. பத்து வருஷமாக இப்படியே தான் சுற்றிக் கொண்டிருக்கிறது.
“மாமி... மாமி...” என்று குரல் கேட்டு அவனது சிந்ஙதனைச்சரம் அறுந்தது. ஊஞ்சலில் படுத்தவாறே அவன் தலையை ஒருக்களித்துப் பார்த்தான்.
பாவாடை நாடா அவிழ்ந்து விட்டதால் ஒரு கை அறைக்கிப் பிடித்துக் கொண்டிருக்க. இன்னொரு கையில் எவர்சில்வர் தூக்கு ஒன்றைப் பிடித்துக் கொண்டு, பத்து வயதுச் சிறுமி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
ராஜாமணி அந்தக் கோலத்தில் அவளைப் பார்க்கவே அவள் முகம் வெட்கத்தால் இன்னும் சிவந்தது.
“யாரம்மா அது?” என்று கங்காபாய் எழுந்தாள்.
“ஜம்னா அக்கா இதைக் கொடுத்தனுப்பிச்சாங்க” என்று இன்னொரு தடவை ராஜாமணியைப் பார்த்துவிட்டு வெட்கப்பட்டாள் அதை சிறுமி.
ஜமுனாவின் பெயரைக் கேட்டதும் ராஜாமணிக்கு எல்லாம் மறந்து போயிற்று. அவள் ஓட்டலுக்கு வந்ததும் அவனைப் பார்த்துச் சிரித்ததும், வீட்டுக்கு வரும் வரை தெப்போற்சவத்துத் தெப்பல் மாதிரி மனசில் ஆக்கிரமித்த இன்ப உணர்வும், மீண்டும் அவனைப் புதுப்பித்தன.
இடை ஒசியக் கையை வீசியவாறு நடந்த ஜமுனா, ஓட்டல் படி இறங்கும் பொழுது, மறுபடியும் ஒரு தடவை அவனைப் பார்த்து சிரித்தது பூவாண வெளிச்சம் போல் மனசைப் பிரகாசிக்க வைத்தது.
“ஏண்டி பொண்ணே நாடா அவிழ்ந்துடுத்தா?” கங்காபாய் கேட்டாள்.
கீழ்க்கண்ணால் ராஜாமணியைப் பார்த்தவாறே அந்தச் சிறுமி தலையாட்டினாள்.
“உள்ளார போயி கட்டிக்கோ.”
சர சர வென்று உள்ளே வந்த சிறுமி ஊஞ்சலைத் தாண்டி புழக்கடைக்குப் போகும் உள் நடையில் மறைவாக நின்றாள்.
அவன் கொடுத்த எவர்சில்வர் தூக்கின் மூடியைத் திறந்து பார்த்தாள் கங்காபாய்.
“ஜம்னா வீட்டிலே இன்னிக்கு என்ன விசேஷம்? பால் பாயசம் பண்ணியிருக்காளே” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.
கல்லாவில் தான் உட்கார்ந்திருந்தபோது, ஜமுனா ரங்கையரைக் கூட்டிக் கொண்டு போனது ராஜாமணிக்குக் கவனம் வந்தது.
அவள் சொல்ல வாயெடுப்பதற்குள் கங்காபாய் பேசிக் கொண்டே உள்ளே போய் விட்டாள்.
“இருடீ கொழந்தே! பாத்திரத்தை மாற்றி அலம்பிக் கொடுத்துடறேன்.”
“சரி மாமீ...” சிறுமியின் குரல் ராஜாமணியை உத்தேசித்து சிறு முனகலாக வெளி வந்தது.
கங்காபாய் பால் பாயாசத்தை வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு எவர்சில்வர் தூக்கை அலம்பப் புழக்கடைக்குப் போனாள்.
ரங்கையர் வீட்டிலிருந்து பலகாரங்கள் ஏதாவது சமயங்களில் வருவது உண்டு. ராஜாமணி அதை வெறும் பலகாரங்களாகத் தான் சாப்பிடுவான்.
இந்த முறை ஜமுனாவின் கரங்கள் அதைச் செய்திருக்கின்றன என்ற நினைவே அவனுள் கிளர்ச்சியை ஏற்படுத்திற்று.
அம்மா பால் பாயசத்தை எப்போது கொண்டு வருவாள் என்று அவன் மனம் ஏங்கத் தொடங்கிற்று. அவனது ஆவல் கங்காபாய்க்குத் தெரியவில்லை.
சிறுமியை அனுப்பிவிட்டு மனசில் விழுந்திருந்த சிக்கலை அறக்க முடியாத பளுவுடன், அவள் சீடையை உருட்ட உட்கார்ந்து விட்டாள்.
“அம்மா ஒரு கப்பிலே கொஞ்சம் பாயசம் கொண்டு வாயேன்!” என்று வாய் விட்டுக் கேட்டாள் ராஜாமணி.
“அடடே... சாப்பிடறச்சே குடுக்கலாம்னு இருந்துட்டேண்டா கொழந்தே” என்று அங்கலாய்த்தவாறே எழுந்தாள் கங்காபாய்.
“ரங்கையன் இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டான்னா அவன் ஒத்தை மரமா தனிச்சப் போவான். இப்பவே சீமைய சுத்திண்டிருக்கிற பையன் அவன் கைக்கு ஒதவ மாட்டான். ம்ம்... காலமெல்லாம் ஒழைச்சு அவனும் என்னத்தைக் கண்டான்? அவன் சம்சாரம்தவறி எட்டு வருஷமாவப் போறது. இந்தப் பொண்ணு ஜம்னாதான் பூமியிலே வேர் பத்தினாப்பிலே அவனை ஒட்டி நிக்க வச்சா. பொண்ணு நல்ல கொணம். தங்க விக்ரகமாட்டம் இருப்பா. பேசினா கிளி கொஞ்சும். வயசுக்கு வந்த அஞ்சாறு வருஷமாகப் போகிறது. அவளுக்கு என்னிக்கு கங்கண யோகம் பொறக்கப் போறதோ?”
-அம்மா பேசிக் கொண்டே போய் பாயாசத்தை ஊற்றியவாறு பேசிக் கொண்டே திரும்பினாள், அவள் வார்த்தைகளில் ஒன்றைக் கூடத் தவற விடாமல் கூர்ந்து கேட்டான் ராஜாமணி.
பால்பாயாசம் அவனுக்கு அடிநாக்கு வரை தித்தித்தது.
அதற்கப்புறம் சேது என்ன லெட்டர் போட்டிருந்தான் என்று விசாரிக்கவே மறந்து விட்டான்.
“ஜம்னா சின்னப் பொண்ணா இருக்கும்போது பார்த்தது. நாம கச்சேரித் தெருவிலே குடித்தனம் இருந்தப்ப.”
“அவ எப்பவும் உன்னை விசாரிக்கிறாடா. குமாரசாமி கோயிலுக்கு சாயந்திரமா நவக்கிரகம் சுத்த வர்றச்சே எப்பவாவது பாப்பா... பார்க்கிறப்பல்லாம் விசாரிப்பா...”
கங்காபாய் கொடுத்த க்ளூ பால் பாயாசத்தைவிட அதிகமாய் இனித்தது. குமாரசாமி கோயில், சாயந்திர வேளை என்று அவன் கவனமாகக் குறித்துக் கொண்டான்.
அவனோடு கிரிக்கெட் விளையாடும் நந்தகுமார் வீடு. குமாரசாமி கோயிலுக்கு வெகு அருகில், ஜன்னலைத் திறந்தால் கோயிலுக்கு வருவோர் போவோரை கவனிக்கும் சௌகரியத்தோடு அமைந்திருப்பது அவனுக்கு உடனே கவனம் வந்தது.
“சேது லெட்டர் போட்டிருக்காண்டா ராஜா” என்று ராஜாமணி சாக்ஸைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது சொன்னாள் கங்கா பாய்.
“என்னவாம்?” என்று அசிரத்தையோடு கேட்டான் ராஜாமணி. அவன் குரலில் தெரிந்த அசுவாரஸ்யமும் அலட்சியமும் கங்கா பாய்க்கு சுருக் என்று தைத்தன.
அவள் நடை வாசற்படியில் தெரிந்த ராஜாமணியின் உருவத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு நெடுமூச்செறிந்தாள். இரண்டு சகோதரர்களுக்கும் மத்தியில் துளிக்கூட பந்தமில்லாமல் இருப்பது அந்த தாய் உள்ளத்தை வருத்தியது.
சீடைக்காகப் பிசைந்து வைத்திருந்த மாவில் சிறுசு சிறுசாக உருண்டை உருட்டிக் கொண்டிருந்தாள் கங்காபாய். அவள் ஒரு சீடை ஸ்பெஷலிஸ்ட். ஆனந்தராவுக்கு சீடை என்றால் மிகவும் பிடிக்கும். மாதத்துக்கு ஒரு தரம் இரண்டு தரம் ஒரு பெரிய டின்னில் செய்து கொட்டி வைத்து விடுவாள். கறுமுறுவென்று பல்லில் பட்டதுமே நொறுங்கி விடுகிற மாதிரி கங்காபாய் சீடை தயார் செய்வாள்.
“என்னம்மா, பதிலே பேசலே? -” ராஜாமணி அம்மாவுக்கு நேரே கூடத்து ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தான்.
அவளுடைய ஒல்லியான உடம்பும் கண்ணாடி மாட்டிய கண்களும் தும்பைப் பூவாய் நரைத்த தலையும் கங்காபாயின் வயதை அதிகப்படுத்திக் காட்டின. பூஞ்சை உடம்பு, ஜலதோஷம் வந்தால் கூடத் தாங்காது. ஓடியாடி வேலை செய்து விட்டாளானால் ஒரு வாரம் படுத்துக் கொள்ள வேண்டியதுதான். தனக்கு இங்கே வலிக்கிறது இப்படியிருக்கிறது என்று ஒரு வார்த்தை வாய் திறந்து சொல்ல மாட்டாள். பூனை போல சுருண்டு படுத்துக் கொண்டு விடுவாள்.
அம்மா பதிலே பேசாததைக் கண்டதும் ராஜாமணிக்கு அவ்வளவு அலட்சியமாகத் தான் விசாரித்திருக்கக் கூடாது என்று பட்டது. என்ன இருந்தாலும் சேது அண்ணாவும் அவளுக்கு ஒரு மகன்தானே! அம்மாவின் பாசத்தில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு அல்லவா என்று உறைத்தது.
“அப்போ, நீ பேசப் போறதில்லே. மௌன விரதமாக்கும்... சரி, இரு. நீ மௌன விரதம் இருந்தா நான் உண்ணாவிரதம் இருக்கேன்...!”
கங்காபாய்க்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“நீ பெரிய காந்தி...! உண்ணாவிரதம் இருக்கப் போறே...”
“ஏம்மா... நான் காந்தியாக மாட்டேனா... மாட்டேன்னு சொல்லிடு... ஒரே வருஷத்தில் ஆயிக்காட்டிடறேன்...”
“ஒரு வாரத்துக்கு காந்தியா இருந்துட்டு அப்புறமா பிஸி பேளாஹூளி ஏம்மா செய்யலேன்னு சத்தம் போடுவே, அப்படித்தானே?”
“பெற்ற அன்னையே இவ்விதம் தன் மகனைப் புறக்கணித்தால் உலகம் எவ்விதம் மதிக்கப் போகிறது? அன்னையே... என் நெற்றியிலே வீரத்திலகம் இட்டு என்னைக் காந்தியாக ஆசீர்வதிக்க மாட்டாயா?” என்று நாடகக் கதாபாத்திரம் போல் வசனம் போசினான் ராஜாமணி.
கங்காபாய்க்குச் சிரிப்பு பொத்துக் கொண்டது. அவளை மசிய வைக்க இப்படி ஏதாவது செய்வான் அவன்.
“டிராமா கம்பெனிக்குப் போயிடு.”
“நான் டிராமாவில் சேர்ந்து விட்டால் டி.எஃப்.ஓ. ஆவது எப்படி? சொல் அம்மா சொல்...” என்று மறுபடியும் வசனம் பேசினான் ராஜாமணி.
இந்த வசனத்தால் கங்காபாயின் சிரிப்பு வற்றி விட்டது.
“நீ டி.எஃப்.ஓ. ஆயிடணும்னு துடிக்கிறே. சேதுவோ மாமனார் வீட்டு மாப்பிளையா கோயம்புத்தூர் ஓட்டலைப் பார்த்துண்டிருக்கான். அவருக்கும் வயசு ஆயிண்டே போறது. பதினெட்டு வருஷமா ராத்திரி பகல் பார்க்காமே, பிஸினஸைக் கட்டிண்டு ஒரு பக்கம் அழறார். நான் ஒருத்தி சீக்காளி, என்னையும் கட்டிண்டு, வாரத்துக்கு ரெண்டு நாள் எனக்கு சமைத்துப் போட்டுண்டு மாரடிக்கிறார். எங்க சந்தான பாக்கியம் அப்படியிருக்கு” என்று பெருமூச்செறிந்தாள் கங்காபாய்.
ராஜாமணி மெதுவாக ஊஞ்சலை உந்தி விட்டான். பழங்காலத்துச் சங்கிலி ஊஞ்சல், முன்னும் பின்னும் அசைய அசைய கிரீச் கிரீச் என்று சங்கிலி சத்தம் போட்டது.
“நான் என்னம்மா பண்ணட்டும்?”
“பண்றது என்னடா... உனக்கும் வயசாயிடுத்து. காலா காலத்திலே ஒரு கல்யாணம் பண்ணிண்டு ஓட்டலைப் பார்த்துக்கோ...”
ஒருமுறை உந்திவிட்டு ராஜாமணி ஊஞ்சலில் நீட்டிப் படுத்துக் கொண்டான். உறுதியான பர்மா தேக்கு, உட்கார்ந்தும் படுத்தும் ஊஞ்சல் பலகை மழமழவென்று தேய்ந்து போயிருந்தது. அந்த வழுவழுப்பை அனுபவிப்பதே ஒரு தனி சுகம்.
தலைக்குக் கீழே இரண்டு கைகளையும் கோர்த்து மடித்துக் கொண்டான் ராஜாமணி.
“ஓட்டலை என் தலையிலே கட்டறதுன்னு ஒங்களுக்குத் திட்டமிருந்தா, என்னை ஏம்மா காலேஜிலே சேர்த்தீங்க?”
ஊஞ்சல் வேகம் குன்றாமல் ஆடிற்று.
“காலேஜிலே படிச்சுட்டா என்னடா? போன வருஷம் பி.ஏ., படிச்சு ஃபெயிலாயி ஒருத்தன் சர்வரா வரல்லே?” - கங்காபாயின் தர்க்கம் அவனுக்கு கசப்பாய் இருந்தது.
“அப்ப பாஸ் பண்ணிட்டு நானும் சர்வரா போயிடட்டுமா?”
கங்காபாய் சீடை மாவை எண்ணெய் தொட்டு உருட்டி உருட்டிப் போட்டாள்.
“ஒன் கட்சியைத் தானே நீ பேசறே? பிள்ளைகளை வளர்த்து அவர் அடைஞ்ச சொகம் என்னடா?”
ராஜாமணி, கூடத்தில் ஓர் ஆணியில் மாட்டிய சரத்தில் தொங்கிய முத்துக்கிளி காற்றில் சுற்றுவதை வேடிக்கை பார்த்தான்.
“நான் பெரிய ஆபீசரானப்புறம் அந்த சொகத்தை நீங்க அனுபவிக்கத்தானே போறீங்க! நான் ஒண்ணும் சேது இல்லே, வசதியான மாமனார் வீடு கெடைச்சதும் அதுவே சொர்க்க லோகம்னு செட்டில் ஆயிட மாட்டேன்.”
சரிந்த மூக்குக் கண்ணாடியை நிமிர்த்தி விட்டுக் கொண்டு கங்காபாய் பேசினாள்.
“அவந்தான் போய்விட்டான். சொல்லிச் சொல்லிக்காட்டி. வந்துடப் போறானா...?” ஒங்க அப்பாவுக்கு நீயுவு அவனும் மட்டும் தான் பிள்ளைகள்னு நெனைச்சுடாதே. இந்த ஓட்டல்கூட ஒரு பிள்ளைதான். நீங்கள்ளாம் காப்பாத்தலேன்னாலும் அந்தப் பிள்ளை காப்பாத்தும்பார். கடைசியிலே அந்தக் கதிதான் அவருக்குக் கிடைக்கும் போலிருக்கு.”
இது அம்மாவின் வழக்கமான பல்லவி அல்ல என்று மட்டும் புரிந்தது. பெற்றோர்களின் மனக் குமைவு. அவர்களது அபிலாஷைகள் நொறுங்கும் சோகம். கடைசி காலத்தில் கிளைகள் வெட்டப்பட்டுத் தனித்திருக்கப் போகும் வெறுமை. இப்படி அவள் குரலில் என்னென்னவோ தெரிந்தன.
ராஜாமணி கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தான்.
வாழ்க்கை முழுவதும் ஆனந்த பவனின் கல்லாமேஜையில் பில் வாங்கிப் போட்டுக் கொண்டு, பிள்ளைகுட்டி பெற்று வயதாகித் தளர்ந்து ஆனந்த பவனின் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் வாழை இலைகளைப் போல் கனவுகளை வீசி எறிந்து விட்டு...
“மைகாட்” என்று அவன் வாய் முணுமுணுத்தது.
கிரிக்கெட் பிராக்டிஸ்... லெக்சரர் ராமபத்ரன்... டி.எஃப்.ஓ. சோமையா எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா...?
ஊஞ்சல் ஆட்டம் நின்று விட்டது.
அம்மா ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவள் மீண்டும் பேசினாள். அப்படி அவள் திடீர் திடீரென்று பேசுவாள்.
“இந்த ஓட்டலை நிலைச்ச நிக்க வைக்க அவர் என்ன பாடுபட்டிருக்கார் தெரியுமா? ஆரம்பத்திலே வேலூர் கோட்டையிலே கச்சேரிக்குப் பக்கத்திலே சின்ன தண்ணீர்ப் பந்தல் தானேடா வச்சிருந்தாரு!அப்ப எனக்குக் கல்யாணமாகி மொதல் வருஷம். ரங்கையனுக்கு பெரிய பையன் பொறந்துட்டிருந்தான். இப்ப கப்பல்லே தேசம் தேசமா சுத்திண்டிருக்கானே அந்த ராகவன் ரெண்டு மாசத்துக் கொழந்தை. ஒங்க அப்பா சரக்குப் போடுவார். ரங்கையன் சப்ளை பண்ணுவான். அன்னன்னிக்கு வியாபாரம் ஆயி லாபத்திலே ஒரு படி அரிசி, மளிகை சாமான், ஒண்ணே முக்காலணான்னு வாங்கிண்டு வருவார்.
இங்கே ஓட்டல் நடத்தக் கட்டடம் காலியா இருக்குன்னு சுப்பண்ணா வந்து கூப்பிட்டான். நன்னா நடந்துண்டிருக்கிற தண்ணீர்ப் பந்தலை மூட முடியாதுண்ணு அடிச்சுச் சொல்லிட்டார். விதி யாரை விட்டது? இங்கே இப்படி ஒரு ஓட்டல் நடத்தியாகணும்னு எழுத்து இருக்கறச்சே... மாத்த முடியுமா?”
கங்காபாய் பழைய காலத்தில் மூழ்கி விட்டாள்.
“ஒரு வருஷத்துக்கு ஒரு தபா கடையை மூடிடலாம்னு பார்க்கறேன் கங்காண்ணு அலுத்துப்பார். ஏகமானியா செலவு அப்ப என்ன... இட்லி அரைரூபா... காப்பி ஒன்னரை ரூபா... ஜனங்கிட்ட காசு நடமாட்டம் அதிகமில்லே... இவரோ தொழிலுக்கு புதுச... எந்த லகானை இழுத்துப் பிடிச்சா வண்டி ஓடும்னு தெரியாது. ம்ம்ம்... எல்லாம் பெரிய பாரதம்... மனசை அவர் விடும்போதெல்லாம் நான் தைரியம் தந்தேன். ஓட்டல்லே வேலை செய்யற பிள்ளைங்க ஒத்தாசையா நின்னாங்க... இல்லேன்னா நீ எங்கே காலேஜ் படிச்சிருக்கப் போறே... அவர் மாதிரியே தண்ணீர்ப் பந்தல் தொறந்திருப்பியோ... இல்லே, குமாஸ்தா உத்தியோகத்துக்கு மனுப் போட்டிண்டிருப்பியோ...”
ராஜாமணி யோசனையில் மூழ்கினான்.
ராமபத்ரன் அடிக்கடி லெக்சர்களின் போது சொல்வார்.
“இந்திய வாழ்க்கையில் சுதந்திரம் இல்லை. தகப்பனாரும் குடும்பமும் இங்கே பிரிக்க முடியாத தளைகள், எந்த இளைஞனும் அதிலிருந்துதப்பிச்சு ஓட முடியாது. இண்டிவிஜுவல் ஃப்ரீடம்னு நீங்க கற்பனை செய்யறதெல்லாம் ஒரு மிரேஜ். கானல் நீர். ரொமாண்டிக் ஆஸ்பிரேஷன் இருக்கறவங்களையெல்லாம் இங்கே றெக்கையைக் கத்தரிச்சுட்டு பறக்க விடுவாங்க, எவனாவது ஒரு ரெபல் பிச்சுண்டு வெளியே கிளம்பினாலும் அவனுடைய ஃபிளைட் பாதி தூரம் போறதுக்குள்ளே அவனைக் காபரா படுத்தி விடும். எமோஷனல் ஸெக்யூரிடி இல்லாததாலே சாமியே சரணம்னு அவன் மறுபடியும் குடும்பத்திலே வந்து விழுந்துடுவான்.”
ராமபத்ரன் பார்வை எவ்வளவு கூர்மையான கழுகுப் õர்வை என்று நினைத்துக் கொண்டான்.
சரத்தில் முத்துக்கிளி மெல்ல அசைந்தாடியதைக் கவனித்தான். அது வென்டிலேட்டர் வழியாக வீசிய காற்றில் வட்டமாகச் சுற்றியது. பத்து வருஷத்துக்கு முன்பு கங்காபாய் பொழுது போகாமல் செய்து மாட்டியது அது. பத்து வருஷமாக இப்படியே தான் சுற்றிக் கொண்டிருக்கிறது.
“மாமி... மாமி...” என்று குரல் கேட்டு அவனது சிந்ஙதனைச்சரம் அறுந்தது. ஊஞ்சலில் படுத்தவாறே அவன் தலையை ஒருக்களித்துப் பார்த்தான்.
பாவாடை நாடா அவிழ்ந்து விட்டதால் ஒரு கை அறைக்கிப் பிடித்துக் கொண்டிருக்க. இன்னொரு கையில் எவர்சில்வர் தூக்கு ஒன்றைப் பிடித்துக் கொண்டு, பத்து வயதுச் சிறுமி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
ராஜாமணி அந்தக் கோலத்தில் அவளைப் பார்க்கவே அவள் முகம் வெட்கத்தால் இன்னும் சிவந்தது.
“யாரம்மா அது?” என்று கங்காபாய் எழுந்தாள்.
“ஜம்னா அக்கா இதைக் கொடுத்தனுப்பிச்சாங்க” என்று இன்னொரு தடவை ராஜாமணியைப் பார்த்துவிட்டு வெட்கப்பட்டாள் அதை சிறுமி.
ஜமுனாவின் பெயரைக் கேட்டதும் ராஜாமணிக்கு எல்லாம் மறந்து போயிற்று. அவள் ஓட்டலுக்கு வந்ததும் அவனைப் பார்த்துச் சிரித்ததும், வீட்டுக்கு வரும் வரை தெப்போற்சவத்துத் தெப்பல் மாதிரி மனசில் ஆக்கிரமித்த இன்ப உணர்வும், மீண்டும் அவனைப் புதுப்பித்தன.
இடை ஒசியக் கையை வீசியவாறு நடந்த ஜமுனா, ஓட்டல் படி இறங்கும் பொழுது, மறுபடியும் ஒரு தடவை அவனைப் பார்த்து சிரித்தது பூவாண வெளிச்சம் போல் மனசைப் பிரகாசிக்க வைத்தது.
“ஏண்டி பொண்ணே நாடா அவிழ்ந்துடுத்தா?” கங்காபாய் கேட்டாள்.
கீழ்க்கண்ணால் ராஜாமணியைப் பார்த்தவாறே அந்தச் சிறுமி தலையாட்டினாள்.
“உள்ளார போயி கட்டிக்கோ.”
சர சர வென்று உள்ளே வந்த சிறுமி ஊஞ்சலைத் தாண்டி புழக்கடைக்குப் போகும் உள் நடையில் மறைவாக நின்றாள்.
அவன் கொடுத்த எவர்சில்வர் தூக்கின் மூடியைத் திறந்து பார்த்தாள் கங்காபாய்.
“ஜம்னா வீட்டிலே இன்னிக்கு என்ன விசேஷம்? பால் பாயசம் பண்ணியிருக்காளே” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.
கல்லாவில் தான் உட்கார்ந்திருந்தபோது, ஜமுனா ரங்கையரைக் கூட்டிக் கொண்டு போனது ராஜாமணிக்குக் கவனம் வந்தது.
அவள் சொல்ல வாயெடுப்பதற்குள் கங்காபாய் பேசிக் கொண்டே உள்ளே போய் விட்டாள்.
“இருடீ கொழந்தே! பாத்திரத்தை மாற்றி அலம்பிக் கொடுத்துடறேன்.”
“சரி மாமீ...” சிறுமியின் குரல் ராஜாமணியை உத்தேசித்து சிறு முனகலாக வெளி வந்தது.
கங்காபாய் பால் பாயாசத்தை வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு எவர்சில்வர் தூக்கை அலம்பப் புழக்கடைக்குப் போனாள்.
ரங்கையர் வீட்டிலிருந்து பலகாரங்கள் ஏதாவது சமயங்களில் வருவது உண்டு. ராஜாமணி அதை வெறும் பலகாரங்களாகத் தான் சாப்பிடுவான்.
இந்த முறை ஜமுனாவின் கரங்கள் அதைச் செய்திருக்கின்றன என்ற நினைவே அவனுள் கிளர்ச்சியை ஏற்படுத்திற்று.
அம்மா பால் பாயசத்தை எப்போது கொண்டு வருவாள் என்று அவன் மனம் ஏங்கத் தொடங்கிற்று. அவனது ஆவல் கங்காபாய்க்குத் தெரியவில்லை.
சிறுமியை அனுப்பிவிட்டு மனசில் விழுந்திருந்த சிக்கலை அறக்க முடியாத பளுவுடன், அவள் சீடையை உருட்ட உட்கார்ந்து விட்டாள்.
“அம்மா ஒரு கப்பிலே கொஞ்சம் பாயசம் கொண்டு வாயேன்!” என்று வாய் விட்டுக் கேட்டாள் ராஜாமணி.
“அடடே... சாப்பிடறச்சே குடுக்கலாம்னு இருந்துட்டேண்டா கொழந்தே” என்று அங்கலாய்த்தவாறே எழுந்தாள் கங்காபாய்.
“ரங்கையன் இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டான்னா அவன் ஒத்தை மரமா தனிச்சப் போவான். இப்பவே சீமைய சுத்திண்டிருக்கிற பையன் அவன் கைக்கு ஒதவ மாட்டான். ம்ம்... காலமெல்லாம் ஒழைச்சு அவனும் என்னத்தைக் கண்டான்? அவன் சம்சாரம்தவறி எட்டு வருஷமாவப் போறது. இந்தப் பொண்ணு ஜம்னாதான் பூமியிலே வேர் பத்தினாப்பிலே அவனை ஒட்டி நிக்க வச்சா. பொண்ணு நல்ல கொணம். தங்க விக்ரகமாட்டம் இருப்பா. பேசினா கிளி கொஞ்சும். வயசுக்கு வந்த அஞ்சாறு வருஷமாகப் போகிறது. அவளுக்கு என்னிக்கு கங்கண யோகம் பொறக்கப் போறதோ?”
-அம்மா பேசிக் கொண்டே போய் பாயாசத்தை ஊற்றியவாறு பேசிக் கொண்டே திரும்பினாள், அவள் வார்த்தைகளில் ஒன்றைக் கூடத் தவற விடாமல் கூர்ந்து கேட்டான் ராஜாமணி.
பால்பாயாசம் அவனுக்கு அடிநாக்கு வரை தித்தித்தது.
அதற்கப்புறம் சேது என்ன லெட்டர் போட்டிருந்தான் என்று விசாரிக்கவே மறந்து விட்டான்.
“ஜம்னா சின்னப் பொண்ணா இருக்கும்போது பார்த்தது. நாம கச்சேரித் தெருவிலே குடித்தனம் இருந்தப்ப.”
“அவ எப்பவும் உன்னை விசாரிக்கிறாடா. குமாரசாமி கோயிலுக்கு சாயந்திரமா நவக்கிரகம் சுத்த வர்றச்சே எப்பவாவது பாப்பா... பார்க்கிறப்பல்லாம் விசாரிப்பா...”
கங்காபாய் கொடுத்த க்ளூ பால் பாயாசத்தைவிட அதிகமாய் இனித்தது. குமாரசாமி கோயில், சாயந்திர வேளை என்று அவன் கவனமாகக் குறித்துக் கொண்டான்.
அவனோடு கிரிக்கெட் விளையாடும் நந்தகுமார் வீடு. குமாரசாமி கோயிலுக்கு வெகு அருகில், ஜன்னலைத் திறந்தால் கோயிலுக்கு வருவோர் போவோரை கவனிக்கும் சௌகரியத்தோடு அமைந்திருப்பது அவனுக்கு உடனே கவனம் வந்தது.
No comments:
Post a Comment