3
டிபன் சாம்பார் கொதி கிளம்பி கும் என்று மணத்தது. இன்னொரு மூலையில் காபி டிகாக்ஷன் வாசனை. காபி போடும் வைத்தா ஒற்றை நாடியாகப் பனியன்கூட இன்றி, ரத்தமின்றி வெளுத்த சரீரத்தில் வியர்வை வழிந்தோட,
யந்திரமாக இயங்கினான்.
சக்சக் கென்று டபரா செட்டுகளில் அவன் ஸ்பூன் ஸ்பூனாக சர்க்கரையை வீசி எறியும் வேகத்தையும், எதிரே வைத்திருந்த டிகாக்ஷன் கெட்டிலை வளைத்து, ஆர்டருக்குத் தகுந்த மாதிரி ஒரு துரித கதியில் நிரப்பும் லயத்தையும், சரக்கு மாஸ்டர் சுப்பண்ணா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
கவிழ்த்துப் போட்ட ட மாதிரி கட்டிய நீள அடுப்பு சுப்பண்ணாவின் சாம்ராஜ்யம். நடுவில் ட முனையில் வைத்தா. பக்கத்தில் தோசை மாஸ்டர் சாரங்கன். சுப்பண்ணாவின் வலப்புறத்தில் குக் ராமையா.
சுப்பண்ணா இட்லிக்கு இரண்டாவது ஈடாக மெதுவடை போட்டுக் கொண்டிருந்தார். கடபுடவென்று குழாயடியில் டபரா செட்டுகளும் தட்டுகளும் சரியும் ஓசையும், குழாய் பீச்சம் ஒலியும் ரெண்டு மசாலேய்ய்ய...’ என்று சர்வர் மாதவன் போடும் கூக்குரலும், தோசைக் கடாயின் சீற்றமும் வெங்காயம் அரியும் கண்ணப்பன் டக்டக் கென்று கத்தியை ஓட்டும் தாள லயமும், சப்த சம்மேளனமாகக் காதில் விழுந்தன. எண்ணெயில் மெதுவடை முறுமுறுக்கும் ஒலி எல்லாவற்றையும் தாண்டி அவர் காதில் விழுந்தது.
எண்ணெய் ஓசையை வைத்துக் கொண்டே வடை வெந்த சங்கதியைத் தெரிந்து கொண்டு விடுவார் சுப்பண்ணா. பதினெட்டு வயதுப் பையனாகக் கரண்டியைப் பிடித்து முப்பத்தைந்து வருஷம் அடுப்படியில் வெந்து இதைத் தெரிந்து கொள்வதா பிரமாதம் என்பார்.
“கண்ணப்பா, வெங்காயத்தை அப்புறமா அரிஞ்சுக்கலாம். புளி கொஞ்சம் கொண்டா. ராமையா, சாம்பாரிலே காரம் தூக்கலாயிருக்கு!” என்று மூக்கை ஒரு தரம் உறிஞ்சி வாசனையைக் கிரகித்தவாறே சொன்னார்.
“என்னைக் குறை கண்டுபிடிக்கலேன்னா ஒமக்கு பொழுது போகாதே.” என்று கறுவினார் குக் ராமையா.
“அஸிஸ்டெண்ட் பிரகஸ்பதி ஐயாசாமியை மொளகாப் பொடியைப் போடுடான்று விட்டுட்டு வாய் கொப்பளித்து வர குழாயடிக்குப் போய்த் திரும்பறதுக்குள்ளே பூந்து விளையாடிட்டான்...” என்று அடுப்புத் தீயை ஏறத் தள்ளிக் கொண்டே சொன்னார் ராமையா.
“ஐயாசாமி எங்கே?”
“லெட்ரீனுக்குப் போயிருப்பான். தம் அடிச்சட்டுவர...”
“ஹத்தேரி கொடகல்னானாம். பின்னே ஒம்மைப்போல ஓல்டு மாடலாகவா இருக்க சொல்கிறீர்... பல் தொலக்காமே காபி சாப்பிடப்படாது. குளிக்காமே டிபன் செய்யப்படாது. ஒம்ம அஸிஸ்டெண்ட் அப்டுடேட். ரேடியாவில் பாட்டு வச்சா இவனும்கூட சேர்ந்து ஜமாய்க்கிறானே... தம் மாரோ தம் மிட்ஜாயே கம்.”
தோசை மாஸ்டர் சாரங்கன் குறுக்கிட்டான்.
“பெரியண்ணா இருந்தா ஒரே கர்நாடக சங்கீதம்தான். எப்படா ராஜாமணி வரும்னு பார்த்துக் கிட்டிருந்து இத்தனை மணிக்கு விவிதபாரதி... இன்ன டயத்துக்கு சிலோன்லே நேயர் விருப்பம்னு போய் நின்னுடறான்.”
“டேய் சாரங்கா... பிறத்தியான் விஷயம்னா வைத்தா காபி ஆத்தறாப்பிலே ஒரு ஆத்து ஆத்தாம விடமாட்டியே! நீ என்னடா யோக்யம்? உன் சங்கதி என்னடா... டூட்டி ஆஃப் கெடைச்சதும் நியூ சினிமா வாசல்லே சைக்கில் ஷாப்பாண்டே காலை ஆட்டிண்டு உட்காந்திருக்கே.”
“மாமாவுக்கு என்னை மோதறதிலே ஒரு குஷி. மாமா நான் வெறும் தோசை... நீங்களோ உளுத்த வடை, போண்டா... தாங்குவேனா?”
சுப்பண்ணா பெரிய உருவம், உயரமும் பருமனும் மிரட்டும். தோற்றம் தான் அப்படி. அப்பளக் குழவிக்கு எண்ணெய் தடவிய மாதிரி வழுக்கைத் தலை. பெரிய வட்ட முகத்தில் எந்த மூலையில் ஒரு ஜோக் காத்திருக்கிறது என்று குறுகுறுக்கும் கண்கள், உப்பலான கன்னம். வெற்றிலைப் புகையிலையால் எப்போது சிவப்புச் சாயம் கட்டின உதடு. ஹே... ஹே..ஹே என்று கேவிக் கொண்டு தொந்தி குலுங்கத் தலையை அண்ணாந்தவாறு சிரித்தாரானால், கண்ணை ஒட்டிய சதை இடுங்கி ஒரு தனி வசீகரம் நிலவும். அவருக்கு வாழ்க்கையே ஒரு பெரிய தமாஷ்.
“மசால் தோசை ரெடி” என்று லொட் லொட் டென்று தோசை கடாயை கரண்டியால் இரண்டு முறை தட்டினான் சாரங்கன்.
“சாரங்கா... மிருதங்கம் வாசிக்கக் கத்துக்கோடா... நன்னா முன்னுக்கு வருவே! ஐயாசாமி பெரிய பாட்டுக்காரானாயிடுவான். நீ அவனுக்குப் பக்க வாத்தியமா இருக்கலாம்” என்று வடைகளை எடுத்துக் கொண்டே சாரங்கனைச் சீண்டினார்.“நான் என்ன முன்னுக்கு வந்தா என்ன மாமா... பொண்ணா வச்சிருக்கீரு.” என்னை மாப்பிள்ளையாக்கிக்க?
எனக்கு ஒரு பொண் இருந்தா ஒன்னை மாதிரி தோசை தேச்சிட்டு டண்டண்னு மோளம் அடிக்கிற பயலுக்கா கொடுப்பேன்! என்று கேட்டவாறே கப்பண்ணா வடைகளைக் கம்பியில் கோத்து வாணலியில் எண்ணெய் இறுக்க வைத்தார்.
தென்னந் துடைப்பத்தால் எண்ணையையும் தண்ணீரையும் தொட்டுக் கொண்டு தோசைக் கடாயின் மேல் இரண்டு விசிறு விசிறி விட்டு, சாரங்கன் பதில் சொன்னான்.
“கவர்னர் வீட்டிலே சமையல் பண்றவனாப் பார்த்துக் கொடுப்பீங்களாக்கும்.”
சாரங்கன் ஜோக்கில் ஓஹோ வென்று சிரிக்கத் தொடங்கினார் குக் ராமையா.
“நீ கெட்டிக்காரண்டா சாரங்கா.”
“எப்படி மாமா?”
“நம்ம ராமையாவைச் சிரிக்க வச்சிட்டையே... இது போறாதா?”
ராமையா முகத்தில சிரிப்பு இன்னும் ஆறவில்லை. ஏழெட்டுக் குழந்தைகள். பெரிய குடும்பி. அவர் சிரிப்பது துர்லபம்.
அதற்குள் தோசை எடுத்துப் போக மாதவன் வந்தான்.
“என்ன மாதவா... பெரியண்ணா சுப்புணியை விசாரிச்சிட்டிருக்காரா?”
“ஸ்டோர் ரூம் ஜன்னல்லே அவன் மொகம் மட்டும் தெரிஞ்சுது. ஒரு விஷயம் மாமா.. ஜம்னா வந்திருந்தா...”
“எந்த ஜம்னா?”ஜமுனா
“மறந்தே போயிட்டீங்காளா?”
“ஓ... ரங்கண்ணா பொண்ணா... இவ்வளவு தூரம் வர மாட்டாளே...
“அவ வந்ததும் ரங்கண்ணா கூடவே போய்ட்டார்...
சுப்பண்ணா, ஓட்டல் தொழிலாளிகள் அனைவருக்கும் மாமா. ரங்கையர் மட்டும் அண்ணா என்பார். இவரும் அண்ணா என்பார். ரங்கையர் தான் பெரியவர். என்றாலும் அப்படி ஒரு மரியாதை அவர்களுக்குள் நிலவிற்று.
வடையை எடுத்துப் போகணியில் போட்டுக் கொண்டே சுப்பண்ணா தொடர்ந்தார்.
“போகறச்சே... ரங்கண்ணா மொகம் எப்படி இருந்தது?”
வாழை இலையில் சட்னியை ஊற்றியவாறு சாரங்கன் பதிலளித்தான்.
“ரங்கண்ணா மொகத்திலே எந்த துப்பைக் கண்டுபிடிக்க முடியும்... எல்லாம் வழக்கப்படிதான்...”
சாரங்கன் தோசைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டான். அவன் அகன்றதும் வேஷ்டி முனையைக் கையில் பிடித்தவாறு. ஆனந்தராவ் உள்ளே வந்தார். அரட்டை நின்று மரியாதையான மௌனம் நிலவிற்று.
சுப்பு என்று குரல் கேட்டபின் தான் அவர் வருகையை உணர்ந்தார் சுப்பண்ணா.
“சுப்புணி போக மாட்டான்... மடப்பய... ரேஸ் பிசாசு அவனைப் பிடிச்சுண்டு பாடாப்படுத்தறது. மற்றபடி தங்கமான பையன். ரொம்ப புழுங்கிச் சாகறான். செய்யறப்ப செஞ்சுட்டானே தவிர இப்ப அவமானப்படறான். போனாப் போட்டும், அவன் திருந்தறந்துக்கு ஒரு சான்று கொடுக்கணும். கோட்டா பண்ணாதீங்கோ. குத்திக் காட்டவும் வேண்டாம். எலேய் சுப்புணி...” என்று ஸ்டால் ஓரமாக நின்று சுவரைச் சுரண்டிக் கொண்டிருந்த சர்வரைக் கூப்பிட்டார் ஆனந்தராவ்.
“மூட்டையை வச்சுட்டு டேபிளிக்குப் போடா. பொறப்பட்டுட்டான். மகா ரோசக்காரன். தம்படி சேத்து வக்யல்லே. தடிமாடு மாதிரி வயசாச்சு. ஊர் ஊரா ஓட்டல் மாத்திண்டு திரிஞ்சா எவண்டா ஒன்னை நம்பிப் பொண்ணு கொடுப்பான்?”
இந்த சித்திரையில் சுப்புணிக்கு கல்யாணம் செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தார் ஆனந்தராவ்.
சுப்புணி பாத்திரங்கள் அடுக்கியிருந்த ரேக்கின் கீழே பெட்டியை வைத்து விட்டு வெளியேறினான்.
சமையல் அறைக்குக் கீழண்டைப் பகுதியில் ப்ளஷ்அவுட் அடித்து கட்டைதைத்து பெரிய தடுப்பு ஸ்டாண்ட் நின்றது. உள்ளே கடகடா சூடு சூடு என்று மாவுரல் அரையும் ஓசை.
ஆனந்தராவ் தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டிப் பார்த்தார்.
முட்டை விழிகளில் ஏதோ ஓர் ஆழ்ந்த சோகத்தைக் கிளறும் வெறிச்சிட்ட பார்வையோடு கணபதி மாவாட்டிக் கொண்டிருந்தான். பொத பொதவென்று ஊறிய மேனி.
அழுக்குப் பனியன். தொந்தி அவர் எட்டிப் பார்த்ததைக் கூடக் கவனியாமல், ஜடம் போல வேதாந்தி போல அரவைக் கல்லோடு ஒன்றி விட்டிருந்தான்.
“என்னடா கணபதி, இட்லிக்கா வடைக்கா?”
டக்கென்று நிமிர்ந்தான் கணபதி.
“சாயந்திரம் இட்லிக்குத்தான், அண்ணா.”
ஆனந்தராவைப் பார்த்ததும், கணபதியின் முகம் அசல் பெண்ணைப் போல் கோணிக் கொண்டது.
அவன் ஆனந்த பவனுக்கு வந்த சேர்ந்த கதை எல்லோரும் அடிக்கடி போடும் கும்மாளம். வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு இருபது ரூபாய் பில்லோடு, கூட்டத்தில் நழுவப் பார்த்தானாம். ரங்கையா பிடித்து விட்டார் கையில் பைசா கிடையாது.
“விட்டுடு ரங்கா ஏதோ வயத்துக் கொடுமை” என்று ஆனந்தராவ் அவனைப் போகச் சொல்லியிருக்கிறார்.
“இருங்கண்ணா... இன்னிக்கு இவனை விட்டுட்டா, நாளைக்கு இன்னொருத்தன் கிளம்புவான். இவனுக்கும் இப்படியே தோல் தடிச்சுடும்” என்று, சாப்பிட்ட காசுக்கு மாவாட்டச் சொல்லியிருக்கிறார்.
மைத்துனி காயலா என்று புறப்பட்டுப் போன அரவை மாஸ்டர் குப்புசாமி, இரண்டு மாடு வாங்கிக் கொண்டு, பால் வியாபாரம் செய்ய ஊரிலேயே நின்றுவிட்டான். கம்பெனி சாப்பாட்டை ருசித்துப் பார்த்த கணபதிக்கும் இதைவிடச் சாயுஜ்ய பதவி வேறு கிடைக்காது என்று சபலம் தட்டி விட்டது.
அப்புறம் என்ன? ஆனந்த பவனில் கணபதி அரைவை மாஸ்டராகி விட்டான். அன்றைக்கு உட்கார்ந்த உரலை விட்டு இன்னும் எழுந்திருக்கவில்லை. தேரை மாதிரி இருந்தவனுக்குத் தொந்தி தள்ளி விட்டது.
இதுதான் ஆனந்த பவன். அங்கே தண்டிக்கப்பட்டவர்கள் கூட பந்தப்பட்டு விடுவார்கள். வாழ்க்கையின் அலையில் வீசியெறியப்பட்ட அனாதைகளுக்கு அங்கே சோறும் வேலையும் கிடைத்து அவர்கள் மனிதர்களானார்கள். வந்தவன் போக விரும்பமாட்டான். போனவனும் ஒரு நாளைக்குக் கண்ணீர் விட்டுக் கொண்டு வந்து நிற்பான். மாஜி அரவை குப்புசாமியும் மாடு திருடு போய் விட்டதென்று முதலாளியிடம் வந்து அழுதான். போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசாமி ஆனந்தபவன் கஸ்டமர், மூன்று நாளில் மாடு கிடைக்க ஆனந்தராவ் ஏற்பாடு செய்தார்.
“இந்தப் பய இல்லேன்னா இப்பவே வந்துடுவேண்ணா” என்று தன் காலிஸ்தானத்தைப் பூர்த்தி செய்த கணபதியைப் பார்த்துச் சொன்னான் குப்புசாமி.
“அவன் இருந்தா என்னடா... நம்மகிட்டே வேறே வேலையா இல்ல? எப்ப வேணும்னாலும் நீ வரலாம்” என்று தைரியங் கொடுத்து அவனை அனுப்பினார் ஆனந்தராவ்.
கணபதி, முதலாளியைப் பார்த்து எழுந்திருக்க முயற்சித்தான்.
“நீ உட்காரு, வேலையைக் கவனி” என்று திரும்பும்போது அவன் உட்கார்ந்திருந்த ஜன்னல் ஓரமாகத் தெரிந்த காட்சியைக் கண்டு திடுக்கிட்டு, ஆனந்தராவ் இன்னொரு முறை எட்டிப் பார்த்தார்.
ஜன்னல் கம்பிகளுக்கு அப்பால் கிணற்றில் ஓரமாக பைப் தெரிந்தது. தண்ணீர்த் தொட்டி அருகே அலமேலு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் அலமேலுவின் பெண் தங்கம் நின்று கொண்டிருந்தாள். தாவணி முந்தானையைக் கடித்துக் கொண்டு அவள் பார்வை சுழன்றது. அலம்பிய பாத்திரத்தை எடுக்கிற சாக்கில் சர்வர் மணி, அவள் பார்வைக்குக் கண்ணைச் சாய்த்துப் பதில் தந்து கொண்டிருந்தான்.
ஆனந்தராவ் அவளையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தார்.
தங்கம் குதிர் மாதிரி வளர்ந்து தலையில் ஒரு கூடை கனகாம்பரமும் கண்ணில் மையுமாக நின்றாள். காதுப் பென்சிலும் மடித்த வேஷ்டியும் பரட்டைத் தலையுமாக மணியின் வாயில் அசட்டு இனிப்பு. பாத்திரத்தை அலம்பும் அலமேலுவுக்கு இந்த நாடகம் நடக்கிற பிரக்ஞையே இல்லை.
ஆனந்தராவுக்கு சிரிப்பும் வந்தது, கோபமும் வந்தது.
இவ்வளவு வயசாய் விட்ட பெண்ணை இவள் எதற்கு ஓட்டலுக்கு இழுத்துக் கொண்டு வருகிறாள் என்று கோபம் அலமேலு மேல் வந்தது. தங்கத்தை அவர் ஓரிரு முறை ஓட்டலில் நடமாடும்போதே கவனித்திருக்கிறார்.
தான் வயசுக்கு வந்துவிட்ட பூரிப்புத் தாங்காமல், சதிர் நடை நடந்து கொண்டு வாலிபப் பையன்கள் வாயில் ஈ நுழைவது மாதிரி, தாடை விழுந்துவிட தன்னைப் பார்ப்பதில் ஒரு குஷியை தங்கம் அனுபவிக்கிறாள் என்று பட்டது.
அவனைக் கண்டிக்கிற சாக்கில் அலமேலுவுக்கும் ஒரு டோஸ் விட வேண்டும் என்று நினைத்தார். கண்டிப்பது மிரட்டுவது இரண்டுமே தன்னால் ஆகாது. ரங்கையரிடம் சொல்லிட வேண்டும் என்று முடிவு செய்தார்.
“மணி” என்று ஜன்னல் வழியாகவே மணியைக் கூப்பிட்டார் ஆனந்தராவ், கையும் களவுமாகப் பிடிபட்ட மாதிரி மணிக்குத் தூக்கிவாரிப் போட்டது.
சிவுக்கென்று, திரும்பிப் பார்த்துவிட்டு “இதோ, வந்தேண்ணா” என்று ஓடி வந்தான்.
“சதா கிணத்தடியிலே என்னடா வேலை?”
“டபரா செட் எடுக்கப் போனேண்ணா.”
“பாபா எங்கே போனான்...?”
ஆனந்தராவ் கேட்கவே, கையில் ஒரு பெரிய பக்கெட்டோடு பாபா அவர் எதிரில் வந்து நின்றான். பெரிய பயில்வான் போல பெரிய கொரில்லா உருவம் ஒரு பக்கத்துக்கு ஓர் இரும்புப் பலகை தைத்த மாதிரி விரிந்த மார்பு, வலை பனியன், அழுக்கு நிஜார்.. கையில் டஸ்டர் துணி, உணர்ச்சி ததும்பும் கண்கள், பெரிய உதடு.
ஆனந்த பவனில் ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை ரங்கையருக்கு ஈடாக உழைக்கிற இன்னொரு ஆத்மா பாபாதான். ஒரு நாளைக்கு அவன் பேசுகிற வார்த்தையை எண்ணி விடலாம். சர்க்கஸ் கம்பெனியில் இருந்தவன். மூன்றாம் வருஷம் அந்த ஊரில் முகாம் போட்ட சர்க்கஸ் கம்பெனி பற்றியெரிந்து விடவே, அவன் ஆனந்தபவனில் வந்து வேலைக்குச் சேர்ந்து கொண்டான்.
பாபாவால் யாருக்கும் எவ்விதமான தொல்லையும் ஏற்பட்டதில்லை. எனினும் அவன் அருகே வந்து நின்றதுமே எவரும் ஒரு பயத்தை உணர்வார்கள்.
“டபரா செட்டுகளையும், தட்டுகளையும் நீயே கெணத்தடியிலிருந்து கொண்டாந்துடு.”
“ஊம்” என்று ஆனந்தராவைப் பார்த்து பவ்யமாகத் தலையாட்டினான் பாபா.
மணிக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் தெளிவாய் விட்டது. முதலாளி சுத்தமாக மோப்பம் பிடித்து விட்டார்.
“மணி, ரங்கண்ணாவைக் கூப்பிடு.”
“அவரு இப்பத்தான் வீட்டுக்கு போனாரு.”
“வீட்டுக்கா?” - ஆனந்தராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அவரோட பொண்ணு ஜமுனா வந்து கூப்பிட்டுக்கிட்டு போச்சு.”
“என்னமோ ஏதோ என்று ஆனந்தராவுக்குக் கலவரம் ஏற்பட்டது. கல்லாவில் உட்கார்ந்திருந்த ராஜாமணியிடம் வந்து விசாரித்தார்.”
“யாரோ ஆனந்தலட்சுமின்று ஒருத்தி வந்திருக்கான்னு சொன்னா ஜம்னா...!”
ஆனந்தராவின் முகம் சட்டென்று மாறிற்று.
“ஆனந்தலட்சுமியா! இத்தனை வருஷங்கள் கழித்தா...!”
“சரி... நான் வீட்டுக்குப் போறேன்” ஆனந்தராவ் உடனே படியிறங்கினார்.
டிபன் சாம்பார் கொதி கிளம்பி கும் என்று மணத்தது. இன்னொரு மூலையில் காபி டிகாக்ஷன் வாசனை. காபி போடும் வைத்தா ஒற்றை நாடியாகப் பனியன்கூட இன்றி, ரத்தமின்றி வெளுத்த சரீரத்தில் வியர்வை வழிந்தோட,
யந்திரமாக இயங்கினான்.
சக்சக் கென்று டபரா செட்டுகளில் அவன் ஸ்பூன் ஸ்பூனாக சர்க்கரையை வீசி எறியும் வேகத்தையும், எதிரே வைத்திருந்த டிகாக்ஷன் கெட்டிலை வளைத்து, ஆர்டருக்குத் தகுந்த மாதிரி ஒரு துரித கதியில் நிரப்பும் லயத்தையும், சரக்கு மாஸ்டர் சுப்பண்ணா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
கவிழ்த்துப் போட்ட ட மாதிரி கட்டிய நீள அடுப்பு சுப்பண்ணாவின் சாம்ராஜ்யம். நடுவில் ட முனையில் வைத்தா. பக்கத்தில் தோசை மாஸ்டர் சாரங்கன். சுப்பண்ணாவின் வலப்புறத்தில் குக் ராமையா.
சுப்பண்ணா இட்லிக்கு இரண்டாவது ஈடாக மெதுவடை போட்டுக் கொண்டிருந்தார். கடபுடவென்று குழாயடியில் டபரா செட்டுகளும் தட்டுகளும் சரியும் ஓசையும், குழாய் பீச்சம் ஒலியும் ரெண்டு மசாலேய்ய்ய...’ என்று சர்வர் மாதவன் போடும் கூக்குரலும், தோசைக் கடாயின் சீற்றமும் வெங்காயம் அரியும் கண்ணப்பன் டக்டக் கென்று கத்தியை ஓட்டும் தாள லயமும், சப்த சம்மேளனமாகக் காதில் விழுந்தன. எண்ணெயில் மெதுவடை முறுமுறுக்கும் ஒலி எல்லாவற்றையும் தாண்டி அவர் காதில் விழுந்தது.
எண்ணெய் ஓசையை வைத்துக் கொண்டே வடை வெந்த சங்கதியைத் தெரிந்து கொண்டு விடுவார் சுப்பண்ணா. பதினெட்டு வயதுப் பையனாகக் கரண்டியைப் பிடித்து முப்பத்தைந்து வருஷம் அடுப்படியில் வெந்து இதைத் தெரிந்து கொள்வதா பிரமாதம் என்பார்.
“கண்ணப்பா, வெங்காயத்தை அப்புறமா அரிஞ்சுக்கலாம். புளி கொஞ்சம் கொண்டா. ராமையா, சாம்பாரிலே காரம் தூக்கலாயிருக்கு!” என்று மூக்கை ஒரு தரம் உறிஞ்சி வாசனையைக் கிரகித்தவாறே சொன்னார்.
“என்னைக் குறை கண்டுபிடிக்கலேன்னா ஒமக்கு பொழுது போகாதே.” என்று கறுவினார் குக் ராமையா.
“அஸிஸ்டெண்ட் பிரகஸ்பதி ஐயாசாமியை மொளகாப் பொடியைப் போடுடான்று விட்டுட்டு வாய் கொப்பளித்து வர குழாயடிக்குப் போய்த் திரும்பறதுக்குள்ளே பூந்து விளையாடிட்டான்...” என்று அடுப்புத் தீயை ஏறத் தள்ளிக் கொண்டே சொன்னார் ராமையா.
“ஐயாசாமி எங்கே?”
“லெட்ரீனுக்குப் போயிருப்பான். தம் அடிச்சட்டுவர...”
“ஹத்தேரி கொடகல்னானாம். பின்னே ஒம்மைப்போல ஓல்டு மாடலாகவா இருக்க சொல்கிறீர்... பல் தொலக்காமே காபி சாப்பிடப்படாது. குளிக்காமே டிபன் செய்யப்படாது. ஒம்ம அஸிஸ்டெண்ட் அப்டுடேட். ரேடியாவில் பாட்டு வச்சா இவனும்கூட சேர்ந்து ஜமாய்க்கிறானே... தம் மாரோ தம் மிட்ஜாயே கம்.”
தோசை மாஸ்டர் சாரங்கன் குறுக்கிட்டான்.
“பெரியண்ணா இருந்தா ஒரே கர்நாடக சங்கீதம்தான். எப்படா ராஜாமணி வரும்னு பார்த்துக் கிட்டிருந்து இத்தனை மணிக்கு விவிதபாரதி... இன்ன டயத்துக்கு சிலோன்லே நேயர் விருப்பம்னு போய் நின்னுடறான்.”
“டேய் சாரங்கா... பிறத்தியான் விஷயம்னா வைத்தா காபி ஆத்தறாப்பிலே ஒரு ஆத்து ஆத்தாம விடமாட்டியே! நீ என்னடா யோக்யம்? உன் சங்கதி என்னடா... டூட்டி ஆஃப் கெடைச்சதும் நியூ சினிமா வாசல்லே சைக்கில் ஷாப்பாண்டே காலை ஆட்டிண்டு உட்காந்திருக்கே.”
“மாமாவுக்கு என்னை மோதறதிலே ஒரு குஷி. மாமா நான் வெறும் தோசை... நீங்களோ உளுத்த வடை, போண்டா... தாங்குவேனா?”
சுப்பண்ணா பெரிய உருவம், உயரமும் பருமனும் மிரட்டும். தோற்றம் தான் அப்படி. அப்பளக் குழவிக்கு எண்ணெய் தடவிய மாதிரி வழுக்கைத் தலை. பெரிய வட்ட முகத்தில் எந்த மூலையில் ஒரு ஜோக் காத்திருக்கிறது என்று குறுகுறுக்கும் கண்கள், உப்பலான கன்னம். வெற்றிலைப் புகையிலையால் எப்போது சிவப்புச் சாயம் கட்டின உதடு. ஹே... ஹே..ஹே என்று கேவிக் கொண்டு தொந்தி குலுங்கத் தலையை அண்ணாந்தவாறு சிரித்தாரானால், கண்ணை ஒட்டிய சதை இடுங்கி ஒரு தனி வசீகரம் நிலவும். அவருக்கு வாழ்க்கையே ஒரு பெரிய தமாஷ்.
“மசால் தோசை ரெடி” என்று லொட் லொட் டென்று தோசை கடாயை கரண்டியால் இரண்டு முறை தட்டினான் சாரங்கன்.
“சாரங்கா... மிருதங்கம் வாசிக்கக் கத்துக்கோடா... நன்னா முன்னுக்கு வருவே! ஐயாசாமி பெரிய பாட்டுக்காரானாயிடுவான். நீ அவனுக்குப் பக்க வாத்தியமா இருக்கலாம்” என்று வடைகளை எடுத்துக் கொண்டே சாரங்கனைச் சீண்டினார்.“நான் என்ன முன்னுக்கு வந்தா என்ன மாமா... பொண்ணா வச்சிருக்கீரு.” என்னை மாப்பிள்ளையாக்கிக்க?
எனக்கு ஒரு பொண் இருந்தா ஒன்னை மாதிரி தோசை தேச்சிட்டு டண்டண்னு மோளம் அடிக்கிற பயலுக்கா கொடுப்பேன்! என்று கேட்டவாறே கப்பண்ணா வடைகளைக் கம்பியில் கோத்து வாணலியில் எண்ணெய் இறுக்க வைத்தார்.
தென்னந் துடைப்பத்தால் எண்ணையையும் தண்ணீரையும் தொட்டுக் கொண்டு தோசைக் கடாயின் மேல் இரண்டு விசிறு விசிறி விட்டு, சாரங்கன் பதில் சொன்னான்.
“கவர்னர் வீட்டிலே சமையல் பண்றவனாப் பார்த்துக் கொடுப்பீங்களாக்கும்.”
சாரங்கன் ஜோக்கில் ஓஹோ வென்று சிரிக்கத் தொடங்கினார் குக் ராமையா.
“நீ கெட்டிக்காரண்டா சாரங்கா.”
“எப்படி மாமா?”
“நம்ம ராமையாவைச் சிரிக்க வச்சிட்டையே... இது போறாதா?”
ராமையா முகத்தில சிரிப்பு இன்னும் ஆறவில்லை. ஏழெட்டுக் குழந்தைகள். பெரிய குடும்பி. அவர் சிரிப்பது துர்லபம்.
அதற்குள் தோசை எடுத்துப் போக மாதவன் வந்தான்.
“என்ன மாதவா... பெரியண்ணா சுப்புணியை விசாரிச்சிட்டிருக்காரா?”
“ஸ்டோர் ரூம் ஜன்னல்லே அவன் மொகம் மட்டும் தெரிஞ்சுது. ஒரு விஷயம் மாமா.. ஜம்னா வந்திருந்தா...”
“எந்த ஜம்னா?”ஜமுனா
“மறந்தே போயிட்டீங்காளா?”
“ஓ... ரங்கண்ணா பொண்ணா... இவ்வளவு தூரம் வர மாட்டாளே...
“அவ வந்ததும் ரங்கண்ணா கூடவே போய்ட்டார்...
சுப்பண்ணா, ஓட்டல் தொழிலாளிகள் அனைவருக்கும் மாமா. ரங்கையர் மட்டும் அண்ணா என்பார். இவரும் அண்ணா என்பார். ரங்கையர் தான் பெரியவர். என்றாலும் அப்படி ஒரு மரியாதை அவர்களுக்குள் நிலவிற்று.
வடையை எடுத்துப் போகணியில் போட்டுக் கொண்டே சுப்பண்ணா தொடர்ந்தார்.
“போகறச்சே... ரங்கண்ணா மொகம் எப்படி இருந்தது?”
வாழை இலையில் சட்னியை ஊற்றியவாறு சாரங்கன் பதிலளித்தான்.
“ரங்கண்ணா மொகத்திலே எந்த துப்பைக் கண்டுபிடிக்க முடியும்... எல்லாம் வழக்கப்படிதான்...”
சாரங்கன் தோசைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டான். அவன் அகன்றதும் வேஷ்டி முனையைக் கையில் பிடித்தவாறு. ஆனந்தராவ் உள்ளே வந்தார். அரட்டை நின்று மரியாதையான மௌனம் நிலவிற்று.
சுப்பு என்று குரல் கேட்டபின் தான் அவர் வருகையை உணர்ந்தார் சுப்பண்ணா.
“சுப்புணி போக மாட்டான்... மடப்பய... ரேஸ் பிசாசு அவனைப் பிடிச்சுண்டு பாடாப்படுத்தறது. மற்றபடி தங்கமான பையன். ரொம்ப புழுங்கிச் சாகறான். செய்யறப்ப செஞ்சுட்டானே தவிர இப்ப அவமானப்படறான். போனாப் போட்டும், அவன் திருந்தறந்துக்கு ஒரு சான்று கொடுக்கணும். கோட்டா பண்ணாதீங்கோ. குத்திக் காட்டவும் வேண்டாம். எலேய் சுப்புணி...” என்று ஸ்டால் ஓரமாக நின்று சுவரைச் சுரண்டிக் கொண்டிருந்த சர்வரைக் கூப்பிட்டார் ஆனந்தராவ்.
“மூட்டையை வச்சுட்டு டேபிளிக்குப் போடா. பொறப்பட்டுட்டான். மகா ரோசக்காரன். தம்படி சேத்து வக்யல்லே. தடிமாடு மாதிரி வயசாச்சு. ஊர் ஊரா ஓட்டல் மாத்திண்டு திரிஞ்சா எவண்டா ஒன்னை நம்பிப் பொண்ணு கொடுப்பான்?”
இந்த சித்திரையில் சுப்புணிக்கு கல்யாணம் செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தார் ஆனந்தராவ்.
சுப்புணி பாத்திரங்கள் அடுக்கியிருந்த ரேக்கின் கீழே பெட்டியை வைத்து விட்டு வெளியேறினான்.
சமையல் அறைக்குக் கீழண்டைப் பகுதியில் ப்ளஷ்அவுட் அடித்து கட்டைதைத்து பெரிய தடுப்பு ஸ்டாண்ட் நின்றது. உள்ளே கடகடா சூடு சூடு என்று மாவுரல் அரையும் ஓசை.
ஆனந்தராவ் தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டிப் பார்த்தார்.
முட்டை விழிகளில் ஏதோ ஓர் ஆழ்ந்த சோகத்தைக் கிளறும் வெறிச்சிட்ட பார்வையோடு கணபதி மாவாட்டிக் கொண்டிருந்தான். பொத பொதவென்று ஊறிய மேனி.
அழுக்குப் பனியன். தொந்தி அவர் எட்டிப் பார்த்ததைக் கூடக் கவனியாமல், ஜடம் போல வேதாந்தி போல அரவைக் கல்லோடு ஒன்றி விட்டிருந்தான்.
“என்னடா கணபதி, இட்லிக்கா வடைக்கா?”
டக்கென்று நிமிர்ந்தான் கணபதி.
“சாயந்திரம் இட்லிக்குத்தான், அண்ணா.”
ஆனந்தராவைப் பார்த்ததும், கணபதியின் முகம் அசல் பெண்ணைப் போல் கோணிக் கொண்டது.
அவன் ஆனந்த பவனுக்கு வந்த சேர்ந்த கதை எல்லோரும் அடிக்கடி போடும் கும்மாளம். வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு இருபது ரூபாய் பில்லோடு, கூட்டத்தில் நழுவப் பார்த்தானாம். ரங்கையா பிடித்து விட்டார் கையில் பைசா கிடையாது.
“விட்டுடு ரங்கா ஏதோ வயத்துக் கொடுமை” என்று ஆனந்தராவ் அவனைப் போகச் சொல்லியிருக்கிறார்.
“இருங்கண்ணா... இன்னிக்கு இவனை விட்டுட்டா, நாளைக்கு இன்னொருத்தன் கிளம்புவான். இவனுக்கும் இப்படியே தோல் தடிச்சுடும்” என்று, சாப்பிட்ட காசுக்கு மாவாட்டச் சொல்லியிருக்கிறார்.
மைத்துனி காயலா என்று புறப்பட்டுப் போன அரவை மாஸ்டர் குப்புசாமி, இரண்டு மாடு வாங்கிக் கொண்டு, பால் வியாபாரம் செய்ய ஊரிலேயே நின்றுவிட்டான். கம்பெனி சாப்பாட்டை ருசித்துப் பார்த்த கணபதிக்கும் இதைவிடச் சாயுஜ்ய பதவி வேறு கிடைக்காது என்று சபலம் தட்டி விட்டது.
அப்புறம் என்ன? ஆனந்த பவனில் கணபதி அரைவை மாஸ்டராகி விட்டான். அன்றைக்கு உட்கார்ந்த உரலை விட்டு இன்னும் எழுந்திருக்கவில்லை. தேரை மாதிரி இருந்தவனுக்குத் தொந்தி தள்ளி விட்டது.
இதுதான் ஆனந்த பவன். அங்கே தண்டிக்கப்பட்டவர்கள் கூட பந்தப்பட்டு விடுவார்கள். வாழ்க்கையின் அலையில் வீசியெறியப்பட்ட அனாதைகளுக்கு அங்கே சோறும் வேலையும் கிடைத்து அவர்கள் மனிதர்களானார்கள். வந்தவன் போக விரும்பமாட்டான். போனவனும் ஒரு நாளைக்குக் கண்ணீர் விட்டுக் கொண்டு வந்து நிற்பான். மாஜி அரவை குப்புசாமியும் மாடு திருடு போய் விட்டதென்று முதலாளியிடம் வந்து அழுதான். போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசாமி ஆனந்தபவன் கஸ்டமர், மூன்று நாளில் மாடு கிடைக்க ஆனந்தராவ் ஏற்பாடு செய்தார்.
“இந்தப் பய இல்லேன்னா இப்பவே வந்துடுவேண்ணா” என்று தன் காலிஸ்தானத்தைப் பூர்த்தி செய்த கணபதியைப் பார்த்துச் சொன்னான் குப்புசாமி.
“அவன் இருந்தா என்னடா... நம்மகிட்டே வேறே வேலையா இல்ல? எப்ப வேணும்னாலும் நீ வரலாம்” என்று தைரியங் கொடுத்து அவனை அனுப்பினார் ஆனந்தராவ்.
கணபதி, முதலாளியைப் பார்த்து எழுந்திருக்க முயற்சித்தான்.
“நீ உட்காரு, வேலையைக் கவனி” என்று திரும்பும்போது அவன் உட்கார்ந்திருந்த ஜன்னல் ஓரமாகத் தெரிந்த காட்சியைக் கண்டு திடுக்கிட்டு, ஆனந்தராவ் இன்னொரு முறை எட்டிப் பார்த்தார்.
ஜன்னல் கம்பிகளுக்கு அப்பால் கிணற்றில் ஓரமாக பைப் தெரிந்தது. தண்ணீர்த் தொட்டி அருகே அலமேலு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் அலமேலுவின் பெண் தங்கம் நின்று கொண்டிருந்தாள். தாவணி முந்தானையைக் கடித்துக் கொண்டு அவள் பார்வை சுழன்றது. அலம்பிய பாத்திரத்தை எடுக்கிற சாக்கில் சர்வர் மணி, அவள் பார்வைக்குக் கண்ணைச் சாய்த்துப் பதில் தந்து கொண்டிருந்தான்.
ஆனந்தராவ் அவளையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தார்.
தங்கம் குதிர் மாதிரி வளர்ந்து தலையில் ஒரு கூடை கனகாம்பரமும் கண்ணில் மையுமாக நின்றாள். காதுப் பென்சிலும் மடித்த வேஷ்டியும் பரட்டைத் தலையுமாக மணியின் வாயில் அசட்டு இனிப்பு. பாத்திரத்தை அலம்பும் அலமேலுவுக்கு இந்த நாடகம் நடக்கிற பிரக்ஞையே இல்லை.
ஆனந்தராவுக்கு சிரிப்பும் வந்தது, கோபமும் வந்தது.
இவ்வளவு வயசாய் விட்ட பெண்ணை இவள் எதற்கு ஓட்டலுக்கு இழுத்துக் கொண்டு வருகிறாள் என்று கோபம் அலமேலு மேல் வந்தது. தங்கத்தை அவர் ஓரிரு முறை ஓட்டலில் நடமாடும்போதே கவனித்திருக்கிறார்.
தான் வயசுக்கு வந்துவிட்ட பூரிப்புத் தாங்காமல், சதிர் நடை நடந்து கொண்டு வாலிபப் பையன்கள் வாயில் ஈ நுழைவது மாதிரி, தாடை விழுந்துவிட தன்னைப் பார்ப்பதில் ஒரு குஷியை தங்கம் அனுபவிக்கிறாள் என்று பட்டது.
அவனைக் கண்டிக்கிற சாக்கில் அலமேலுவுக்கும் ஒரு டோஸ் விட வேண்டும் என்று நினைத்தார். கண்டிப்பது மிரட்டுவது இரண்டுமே தன்னால் ஆகாது. ரங்கையரிடம் சொல்லிட வேண்டும் என்று முடிவு செய்தார்.
“மணி” என்று ஜன்னல் வழியாகவே மணியைக் கூப்பிட்டார் ஆனந்தராவ், கையும் களவுமாகப் பிடிபட்ட மாதிரி மணிக்குத் தூக்கிவாரிப் போட்டது.
சிவுக்கென்று, திரும்பிப் பார்த்துவிட்டு “இதோ, வந்தேண்ணா” என்று ஓடி வந்தான்.
“சதா கிணத்தடியிலே என்னடா வேலை?”
“டபரா செட் எடுக்கப் போனேண்ணா.”
“பாபா எங்கே போனான்...?”
ஆனந்தராவ் கேட்கவே, கையில் ஒரு பெரிய பக்கெட்டோடு பாபா அவர் எதிரில் வந்து நின்றான். பெரிய பயில்வான் போல பெரிய கொரில்லா உருவம் ஒரு பக்கத்துக்கு ஓர் இரும்புப் பலகை தைத்த மாதிரி விரிந்த மார்பு, வலை பனியன், அழுக்கு நிஜார்.. கையில் டஸ்டர் துணி, உணர்ச்சி ததும்பும் கண்கள், பெரிய உதடு.
ஆனந்த பவனில் ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை ரங்கையருக்கு ஈடாக உழைக்கிற இன்னொரு ஆத்மா பாபாதான். ஒரு நாளைக்கு அவன் பேசுகிற வார்த்தையை எண்ணி விடலாம். சர்க்கஸ் கம்பெனியில் இருந்தவன். மூன்றாம் வருஷம் அந்த ஊரில் முகாம் போட்ட சர்க்கஸ் கம்பெனி பற்றியெரிந்து விடவே, அவன் ஆனந்தபவனில் வந்து வேலைக்குச் சேர்ந்து கொண்டான்.
பாபாவால் யாருக்கும் எவ்விதமான தொல்லையும் ஏற்பட்டதில்லை. எனினும் அவன் அருகே வந்து நின்றதுமே எவரும் ஒரு பயத்தை உணர்வார்கள்.
“டபரா செட்டுகளையும், தட்டுகளையும் நீயே கெணத்தடியிலிருந்து கொண்டாந்துடு.”
“ஊம்” என்று ஆனந்தராவைப் பார்த்து பவ்யமாகத் தலையாட்டினான் பாபா.
மணிக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் தெளிவாய் விட்டது. முதலாளி சுத்தமாக மோப்பம் பிடித்து விட்டார்.
“மணி, ரங்கண்ணாவைக் கூப்பிடு.”
“அவரு இப்பத்தான் வீட்டுக்கு போனாரு.”
“வீட்டுக்கா?” - ஆனந்தராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அவரோட பொண்ணு ஜமுனா வந்து கூப்பிட்டுக்கிட்டு போச்சு.”
“என்னமோ ஏதோ என்று ஆனந்தராவுக்குக் கலவரம் ஏற்பட்டது. கல்லாவில் உட்கார்ந்திருந்த ராஜாமணியிடம் வந்து விசாரித்தார்.”
“யாரோ ஆனந்தலட்சுமின்று ஒருத்தி வந்திருக்கான்னு சொன்னா ஜம்னா...!”
ஆனந்தராவின் முகம் சட்டென்று மாறிற்று.
“ஆனந்தலட்சுமியா! இத்தனை வருஷங்கள் கழித்தா...!”
“சரி... நான் வீட்டுக்குப் போறேன்” ஆனந்தராவ் உடனே படியிறங்கினார்.
No comments:
Post a Comment